Wednesday, April 8, 2009

NELLAI.D.S.SRITHAR

அம்பேத்கர் டீ சர்ட் விழா மும்பையில்
ஈழப்பிரச்சினை முடிந்துவிட வில்லை, அது நம் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்த போராட்டமானாலும், நாம் எல்லோரும் தமிழர்களாக இருக்கிறோமா? என்ற சுயஆய்வாக, நாம் நம் சகோதரர்களை, தமிழர்களாக மட்டும் கருதுகிறோமா, என்ற கேள்வியை முன்வைத்து அடுத்த முன்னெடுப்பு.

எரியும் ஈழப்பிரச்சினையால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் டீ-சர்ட் மற்றும் “நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை” வெளியீட்டு நிகழ்வு:26-04-2008 அன்று நடைபெற இருக்கிறது. நிகழ்விடம் நாளை அறிவிக்கப்படும்.

விழித்தெழு இளைஞர் இயக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த வரலாற்று நாயகன், ஒடுக்கப்பட்ட இனத்தின் விடிவெள்ளியாய் வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்தும், மறையாமல் கொள்கை விளக்காய், இந்துத்வத்திற்கு இன்றும் சிம்ம சொப்பனமாய் விளங்கும் “அம்பேத்கரின் கருத்துகள்” பரவலாக சரியான முறையில் பரவ வெண்டும். அம்பேதகரை படத்தின் அளவுக்கு சுறுக்கிவிட்ட தவற்றை களைய வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்படும் முன்னெடுப்பு இது.

அம்பேத்கரை தலைவர் என்று ஏற்றுக் கொண்டவர்கள் அவருடைய கருத்துகளை மறுதலித்துவிட்டு, அம்பேத்கரின் படத்தை கோவில் கொடை விழாவுக்கு பயன்படுத்துவதும், இன்னும் சொல்லப்போனால் மும்பை போன்ற நகரங்களில் இந்துத்தவத்தின் பரப்புரையாக பயன்படுத்தப்படும் கணேஷ் சதுர்த்தி விழாவில் தாழ்த்தப்பட்டவர்கள் கலந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், தங்களை தாழ்த்திய கீழ்நிலையில் தள்ளிய இந்து மத பண்டிகையில் மதவெறியோடு, தங்களின் விடுதலைக்காக போராடிய தலைவரின் படத்தை கொச்சைப்படுத்துகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, தங்களை மேல்சாதி என்று கருதிக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள், அறிவுலக மேதையாக விளங்கிய அம்பேத்கரை சாதீய கண்ணோட்டத்துடனே அடையாளம் காண்கின்றனர். இந்த மடமையை உடைத்தெறிய வேண்டும்.

அணி திரள்வீர்:

தொடர்புக்கு:
மகிழ்நன் : +919769137032
சிரிதர் : +919987379815
பன்னீர்செல்வம்: +919867488167
பாண்டியன் : +919821072848

No comments:

Post a Comment