Friday, April 17, 2009

NELLAI.D.S.SRITHAR

அண்ணல் அம்பேத்கரின் இளவயதில் ஒருநாள்
ஒரு நாள் அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் தங்கள் தந்தையை வரவேற்கத் தொடர் வண்டி நிலையத்திற்கு மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தனர். பயணத்தின்போது அவர்கள் மாட்டு வண்டி ஓட்டியிடம் பேசிக் கொண்டு வந்தனர். பேச்சின் இடையில் அம்பேத்கரின் சாதியைப் பற்றி வினவினான் வண்டிக்காரன். அம்பேத்கர் தம்முடைய சாதியைச் சொன்னதும் வண்டிக்காரனுக்கு வந்ததே சினம்! உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டான். "யாரைக் கேட்டு வண்டியில் ஏறினீர்கள்? உடனடியாக இறங்கி ஓடி விடுங்கள்" என்றான். அம்பேத்கருக்கும் அவருடைய அண்ணனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருவரும் வண்டிக்காரனுடைய செயலைப் பார்த்து வெலவெலத்துப் போய்விட்டார்கள். இவர்களுடைய தயக்கத்தைப் பார்த்த வண்டிக்காரன் வண்டியில் இருந்து அவர்களைக் கீழே தள்ளி விட்டான். பின்னர், “வண்டியைக் கழுவி விட வேண்டும். இவர்கள் இருவரும் வண்டியைத் தீட்டாக்கி விட்டார்கள்” என்று கூறியவாறு சென்றான் அவன். இந்நிகழ்வு அம்பேத்கரின் மனத்தில் உளைச்சலை ஏற்படுத்தி விட்டது; சாதியக் கொடுமைகளை எண்ணி அந்தப் பிஞ்சு நெஞ்சம் வருந்தியது. இது போன்ற சில நிகழ்வுகள்தாம் பின் நாளில் அவரை ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகப் போராடத் தூண்டின. .

Thursday, April 9, 2009

1947'' -இந்திய விடுதலை மட்டுமல்ல., துயரங்கள் அவலங்கள் மனிதக் கேவலங்கள்


''1947''
கொண்டாட்டங்கள்...கொடியேற்றம்...என்று தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும், வாஸ்கோடகாமா 1498ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.ஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.இந்தியா என்கிற ஒரு தேசம் இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.பிரிவினைக்குக் காரணம் முஸ்லீம் லீக்தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும் காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் இதெல்லாம் தவறு, விடுதலைக்குப்பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும் செல்வந்தரும்தான் பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரிட்டீஷ் ஆட்சியாளன்ன் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின் நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் என தேசமெங்கும் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது. ஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா? முஸ்லீம்களுக்கே உரியதாக தனியாக ஒரு நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.ஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங் காலத்திலும் தொடர தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகிவிட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.இன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப் பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.தமிழர்களாகிய நம்மால் அதிலும் இன்று வாழ்கிற நம்மால் தேசப்பிரிவினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புன்ந்து கொள்ள தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.1947 ஜூன் 3 அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டீஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு "பிரிவினை கமிட்டி'யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான் மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.ஜூன் 18, 1947ல் பிரிட்டீஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் 20 பிரிவுகளையும் மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப்பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது அவை:1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்3. மத்திய வருவாய்4. ஒப்பந்தங்கள்5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை6. பொருளாதார உறவுகள்குழு 17. பொருளாதார உறவுகள்குழு 28. வாழுமிடம்9. வெளியுறவு10. ராணுவம்இந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.1947 ஜூன் 30 அன்று "எல்லைக் குழு' (Boundary Commission) நியமிக்கப்பட்டது. பஞ்சாப் பவுண்டரி கமிஷன், பெங்கால் பவுண்டரி கமிஷன் என இரு குழுக்கள்.இரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர். சின்ல் ரேட்கிளிஃப்(Sri Cyril Radcliff) என்ற பிரிட்டீஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.பஞ்சாப் பவுண்டரி கமிஷன்:1. சர்சின்ல் ரேட்கிளிஃப்2. ஜஸ்டிஸ் தீன் மொகம்மது3. ஜஸ்டிஸ் முகமது முனிர்4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்5. ஜஸ்டிஸ் தேஜாசிங்வங்காள பவுண்டரி கமிஷன்:1. சர் சின்ல் ரேட் கிளிஃப்2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்ஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.பொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.இரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர் சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.இரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.ஆகஸ்டு 17 அன்று இரு நாட்டுப் பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.ஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம் மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.இடம்பெயர்தல்:நடுவில் கோடுகிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜிகூட நினைக்க வில்லை. ஆனால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறுவிதமாக நினைக்கச் செய்தன.ஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.
ராஜேந்திரசிங் (மூன்று சக்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.''அரசர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரசர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது சரித்திரம். ஆனால் மக்கள் எப்போது மாறினார்கள்? (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை?)''பஞ்சாப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் சாதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.ஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்த வர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14.5.1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:""பஞ்சாபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.காலம் காலமாக அஹிம்சையை போதித்து போதித்தே பாதுகாக்க தைரியமற்றவராக்கிய எங்களை நிராயுதபாணியாக்கி காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோசனை கூறுகிறது.நான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏரியாவை ஒதுக்கியிருக்கிறீர்கள்? நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு? நாங்கள் எத்தனை பேர் வருவது? எப்படி வருவது? எங்கள் அசையாச் சொத்துக்களை நாங்கள் என்ன செய்வது? எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா? உங்கள் நிவாரண முகாம்களில் பிச்சைக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா?ஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளீர்கள்.பைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நாங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.உங்கள் வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.''கோழைகளே! கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது சாகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்'' (அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆவணங்கள் கோப்பு எண் CL 9 பகுதி 1,1947 பஞ்சாப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.வசதி படைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். "ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.. இது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத்துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல சொத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்து தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.எனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.எப்படி நிகழ்ந்தது? எப்படியெல்லாம் நிகழ்ந்தது?ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். "முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாணியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மத மாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.இது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப் பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை "கஃபிலா' (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்... ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி ‘கஃபிலா'வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.பின்னர் பல கிராமங்களில் ""தாக்குதலுக்குப் படைவருகிறது'' என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக் கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. "கடத்தப் பட்டவர்களின் மீட்பு மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 1949'' கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது."1.3.1947க்குப் பிறகும் 1.1.1949 க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.தொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dawn) டான் என்ற பத்திரிகை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.அவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் "பாகிஸ்தான் உளவாளி'' என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.அதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்?நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள்? தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா?அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.நாங்கள் யார்?:இதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும். 1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.பொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்? அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA)கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு "அசுத்தஸ்தான்'' என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.திரு. பியாலால் (Mr. Beah Lall) 1946 நவம்பரில் "அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை'' நிறுவினார். "இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தான வாதிகளும் எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை "அசுத்தஸ்தான்'' ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார். (ஆதாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆவணங்கள் கோப்பு எண் G19(KW-1) ஹரிஜன் சேவக் சங் – 1946 - 48)1947 மார்ச் 6 இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே. என். மண்டல், "எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா? எனவே நான் லீகுடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள்'' என முழங்கினார். (மேற்படி AICC ஆவணம்.)இன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நயந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.எவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.ஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ" எழுதினார். "நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.பெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம் :வகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்."அவர்களு''டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை நம்பிக்கைகளை அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்ணின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியானது."அவர்களது'' பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்."அவர்கள்'' தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது நிர்ப்பந்திப்பது வழிகாட்டுவது.தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம் வீட்டுப் பெண்களை குல தெய்வமாக்கி இன்றும் வணங்கி வருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பிரிவினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.தேசப்பிரிவினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி "நம்ம தேசம்'' இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.தமிழக தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள், அகதிகளாக.ஒரு வார்த்தையில் சொல்வதானால் "1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.1947 ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.ஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக இணக்கமாக இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா? பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்? குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன?கலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் கன்றிப்போவதை நாம் எப்படி சன் செய்யப்போகிறோம்?1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள் மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் 1947.

Wednesday, April 8, 2009

NELLAI.D.S.SRITHAR

அம்பேத்கர் டீ சர்ட் விழா மும்பையில்
ஈழப்பிரச்சினை முடிந்துவிட வில்லை, அது நம் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்த போராட்டமானாலும், நாம் எல்லோரும் தமிழர்களாக இருக்கிறோமா? என்ற சுயஆய்வாக, நாம் நம் சகோதரர்களை, தமிழர்களாக மட்டும் கருதுகிறோமா, என்ற கேள்வியை முன்வைத்து அடுத்த முன்னெடுப்பு.

எரியும் ஈழப்பிரச்சினையால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் டீ-சர்ட் மற்றும் “நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை” வெளியீட்டு நிகழ்வு:26-04-2008 அன்று நடைபெற இருக்கிறது. நிகழ்விடம் நாளை அறிவிக்கப்படும்.

விழித்தெழு இளைஞர் இயக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த வரலாற்று நாயகன், ஒடுக்கப்பட்ட இனத்தின் விடிவெள்ளியாய் வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்தும், மறையாமல் கொள்கை விளக்காய், இந்துத்வத்திற்கு இன்றும் சிம்ம சொப்பனமாய் விளங்கும் “அம்பேத்கரின் கருத்துகள்” பரவலாக சரியான முறையில் பரவ வெண்டும். அம்பேதகரை படத்தின் அளவுக்கு சுறுக்கிவிட்ட தவற்றை களைய வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்படும் முன்னெடுப்பு இது.

அம்பேத்கரை தலைவர் என்று ஏற்றுக் கொண்டவர்கள் அவருடைய கருத்துகளை மறுதலித்துவிட்டு, அம்பேத்கரின் படத்தை கோவில் கொடை விழாவுக்கு பயன்படுத்துவதும், இன்னும் சொல்லப்போனால் மும்பை போன்ற நகரங்களில் இந்துத்தவத்தின் பரப்புரையாக பயன்படுத்தப்படும் கணேஷ் சதுர்த்தி விழாவில் தாழ்த்தப்பட்டவர்கள் கலந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், தங்களை தாழ்த்திய கீழ்நிலையில் தள்ளிய இந்து மத பண்டிகையில் மதவெறியோடு, தங்களின் விடுதலைக்காக போராடிய தலைவரின் படத்தை கொச்சைப்படுத்துகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, தங்களை மேல்சாதி என்று கருதிக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள், அறிவுலக மேதையாக விளங்கிய அம்பேத்கரை சாதீய கண்ணோட்டத்துடனே அடையாளம் காண்கின்றனர். இந்த மடமையை உடைத்தெறிய வேண்டும்.

அணி திரள்வீர்:

தொடர்புக்கு:
மகிழ்நன் : +919769137032
சிரிதர் : +919987379815
பன்னீர்செல்வம்: +919867488167
பாண்டியன் : +919821072848

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? - கவிஞர் இரா.இரவி



ஆலயங்களினால் தான் இன்று மனிதன் அமைதி இழந்து தவிக்கின்றான். இந்தியா முழுவதும் இராமருக்கு 7000 கோயில்கள் இருந்தபோதும். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்தார். எனவே அங்குதான் ஆலயம் கட்டுவோம் என்று பாபர் மசூதியை இடித்ததன் விளைவாக நாடெங்கும் கலவரம் வெடித்தது. 1000-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின. விலை மதிப்பற்ற மனித உயிர்கள் மடிந்தன. கோத்ரா ரயில் படுகொலை இப்படி தொடரும் வன்முறை.
பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் மசூதியில் தொழுது கொண்டு இருந்தவர்-களை குண்டு வைத்துக் கொன்றனர். இந்தியா-வில் உள்ள இந்துமதவெறி அமைப்புகள் வன்முறையை தூண்டி விடுகின்றன. ஒவ்வொரு பிள்ளையார், சதுர்த்தியின் போதும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று பொறுமையும் சகிப்புத் தன்மையையும் போதித்த கிறித்துவ ஆலயங்-களை உடைப்பது, சிதைப்பது என்ற நிலை இன்று தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. வட மாநிலங்களில் கிறித்துவர்களை அடிப்-பது, விரட்டுவது, எரிப்பது என வன்முறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
ஆலயங்களில் இருப்பவன், இலலாதவன் என்று வேறுபடுத்தும் விதமாக பணம் கட்டுபவர்களுக்கு அருகில் சிறப்பு தரிசனம், ஏழைகளுக்கு தூரத்தில் தர்ம தரிசனம் என வேறுபாடு. அது மட்டுமல்ல; பிறப்பால் பிராமணராக இருந்தால் மட்டும் கருவறை-யில் அனுமதி, அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றிய போதும், பயிற்சிகள் தந்த போதும் இன்னும் நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் நூலகத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லோரும் சமம். யாரும் எங்கும் செல்லலாம்.
ஆலயங்களுக்குள் நுழைவதே பெரும் போராட்டமாக உள்ளது. பல்வேறு சோதனை-கள் செய்துதான் உள்ளே அனுப்புகின்றனர். காரணம் என்ன? இந்த நிலை ஏன் வந்தது? மதம், மனித மனங்களை நெறிப்படுத்து-வதற்குப் பதிலாக ஏன் இப்படி வெறிப்-படுத்தும் வேலையை செய்து கொண்டு இருக்கின்றது.
நூலகம் என்பது அறிவுத் திருக்கோயில், இங்கு வந்தவர்கள் IAS, IPS என்று உயர்-கின்றார்கள். மதுரை மாவட்ட மய்ய நூலகத்-தில் 2 இலட்சம் நூல்கள் இருக்கின்றன. அப்படி என்றால் 2 இலட்சம் அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்று பொருள். நூலகம் என்பது பெரிய சொத்து, மனிதனை, மனி-தனாக்கும், அறிஞனாக்கும், விஞ்ஞானியாக்கும் திறன் வளர்க்கும்.
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால் தான் இன்று இனவெறியோடு தமிழர்களை அழிக்கும் சிங்களத்-தினர், அன்று தமிழர்களின் இலக்-கியக் களஞ்சியமான மாபெரும் யாழ் நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன இது பொன்மொழி. ஆனால் இன்று, ஒரு ஆலயம் திறக்கப்படும்போது நூறு பேர் கொல்லப்-படுகின்றனர் என்பது புண்மொழி. ஆலயங்-கள் அன்பைப் போதிப்பதற்கு பதிலாக இன்று வம்பைப் போதிக்கின்றன.
தசாவதாரம் திரைப்படத்தில், கலைஞானி கமலஹாசன் ஒரு வசனம் பேசுவார். கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று. இந்த வசனம் சிறப்பாக இருந்தது என்று நான் ஒரு சமயம் கமலை செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டிய போது, அவர் சொன்னார், இந்த வசனத்தைச் சொன்னது உங்கள் மதுரைக்காரரான அறிஞர் தொ. பரமசிவம் என்றார். இது வசனம் மட்டுமல்ல, நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபோது நூலகரை வரவழைத்துத்தான் கவுரவப்படுத்தினார்கள். இன்று சந்திராயன் சந்திரனில் தேசியக் கொடியை நான்காவது நாடாக நட்டு இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அறிவியல் நூல் அறிவு. ஆலயத்தில் பூஜை மட்டும் செய்து கொண்டிருந்தால் சந்திராயனை நம்மால் அனுப்பி இருக்க முடியாது.
அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அறிஞர் அண்ணாவிற்கு நன்கு தெரியும். ஆங்கில அறிஞர்களிடையே அண்ணா பேசும்போது ABCD என்ற நான்கு எழுத்து வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு. அறிஞர் அண்ணா ஆலயம் செல்வ-தில்லை. ஆனால் நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் தான் அறிஞராக மாற முடிந்தது.
மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக் கொண்டிருந்தார். 10-ஆம் நூற்றாண்டு பாரசீக மன்னன் அப்துல் காசிம் இஸ்மாயில் 1,70,000 நூல்கள் வைத்து இருந்தார். அவரது படைத்தளபதிகள் படையெடுத்துச் செல்லும்போது நூல்களைத் தான் அள்ளி வருவார்களாம். அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய அறிஞராக உருவானார். நெப்போலியன் சிறையில் இருக்கும் போது நூல்களைத்தான் படித்தார். ஜவகர்லால் நேருவிற்கு ஆலயம் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால் நூல்கள் படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது.
தந்தை பெரியார் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்தும்போது கோவிலிலிருந்து எடுத்து வந்து பிள்ளையாரை உடைக்க மாட்டார். தனது சொந்தப் பணம் கொடுத்து பிள்ளை-யார் சிலை வாங்கி வரச் சொல்லி உடைத்துக் காட்டி போராட்டம் நடத்தினார். அறிவு நாணயமும், பொது ஒழுக்கமும் மிகுந்தவர் தந்தை பெரியார். ஆனால் இன்று எந்த நாத்திகனும் ஆலயத்தைச் சிதைப்-பதில்லை. ஆனால் ஆத்திகர்கள் தான், மாற்று மதத்தினர் ஒருவருக்கொருவர் ஆலயங்களைச் சிதைத்துக் கொண்டு மோதிக் கொண்டு பலியாகின்றனர். மதுரை சிறையில் 3500 கைதிகளில் அனை-வரும் ஆத்திகர்கள் தான். ஆலயம் மனதை பண்படுத்தவில்லை என்-பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு.
காந்தியடிகளுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. அதனால்தான் திருக்குறளின் காரணமாக தமிழையும் நேசித்தார். சத்திய சோதனை நூல் வடிக்கக் காரணமாக இருந்தது நூல் அறிவு. மாமேதை அப்துல்கலாம், அக்னிச்-சிறகுகள் எனும் தன்னம்பிக்கை விதையை பல்வேறு மொழிகளில் படைத்து விற்பனை-யில் சாதனை படைத்தது. இந்நூல் வடிக்க காரணமாக இருந்தது நூல் அறிவு. தனிமையையும், கவலையையும் விரட்டுவது நூல்கள். வீடு கட்டும் போது வரவேற்பறை, படுக்-கையறை, பூஜையறை, கழிவறை கட்டு-கின்றோம். நூலக அறை கட்டுவதில்லை. இனி ஒவ்வொரு தமிழரும் வீடு கட்டும்போது நூலக அறை கட்ட வேண்டும். பட்டிமன்ற நடுவர். அறிஞர், முனைவர் இரா. மோகன் அவர்தம் வீட்டிற்குச் சென்றவர்களுக்கு இதன் உண்மை விளங்கும். வீட்டில் நூலக அறை வேண்டும் என்கிறோம். ஆனால் நூலகத்-திற்குள் வீடு உள்ளது என்று சொல்லும் அளவிற்கு திரும்பிய பக்கம் அனைத்திலும் நூல்கள்தான் இருக்கும். சங்கத் தமிழ் முதல் இன்று வந்த நூல்கள் வரை அனைத்தும் இருக்கும். அதன் காரணமாகத்தான் பட்டி-மன்றங்களில் நடுவராகக் கலக்குகின்றார். 75 நூல்கள் எழுதிக் குவித்துள்ளார்.
இது கணினி யுகம், இணைய தளங்கள், மின்னணு நூலகங்கள் வந்துவிட்டன. விஞ்-ஞான உலகில் இன்று இணைய தளங்களில் புகழ் பெற்ற தேடுதளங்களான கூகுள். யாகூ. என பல்வேறு தளங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்டால் அது தொடர்-பான அனைத்துத் தகவல்களும் உங்கள் விரல் நுனியில் வந்துவிடும், விழி-களுக்கும் செவிகளுக்கும் விருந்து தரும் பல தகவல்கள் களஞ்சியமாக உள்ளது. இணையம் என்பது தீ போன்றது, தீயை சமைக்கவும், வெளிச்சம் பெறவும், ஆக்க சக்தியாகப் பயன்படுத்தலாம். தீயை எரிக்கவும், கொளுத்-தவும் அழிவு சக்தியாகவும் பயன்படுத்தலாம். இணையத்தை இனி அறிவு வளர்க்கும் ஆக்க சக்தியாக மட்டும் பயன்படுத்துவோம். அறிவைத் சிதைக்கும் ஆபாச அழிவு சக்திக்குப் பயன்படுத்தாமல் இருப்போம்.
எனவே, சாலவும் நன்று எது? என்று கேட்டால் நூலகம் செல்வதே என்பது எனது கருத்து. ஆலயம் செல்வது இன்று ஆடம்-பரமாகி விட்டது. எனவே மனிதனைப் பண்-படுத்தும், நெறிப்படுத்தும் மகிழ்வூட்டும், அறிவுத்-திறன் வளர்க்கும் நூலகம் செல்வோம். நமது குழந்தைகளை நூலகம் அழைத்துச் சென்று பழக்குவோம். வாசிக்கும் பழக்கத்தை சுவாசிப்பதைப் போன்று வழக்கப்படுத்துவோம். நமது பண்பாட்டைச் சிதைத்துச் சீரழிக்கும் திரைப்படம் மற்றும் தொல்லைக்காட்சியாகி-விட்ட தொலைக்காட்சியிலிருந்து விடுபட்டு நூலகம் செல்வோம். ஆரோக்கியமான மனித சமுதாயம் படைப்போம். ஜாதி மத மோதல்-களை விடுப்போம். பகுத்தறிவைப் பயன்படுத்து-வோம். மனிதநேயம் வளர்ப்போம். மானுடம் காப்போம். சமத்துவ, சமதர்ம சமுதாயம் அமைப்போம்.

சமத்துவ பொங்கலோ! பொங்கல்!!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாநிலை போராட்டம்.


ஈழத்தமிழர்களுக்காக கோரிக்கைகள் ஏற்காவிடில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் அறிவித்திருக்கும் அண்ணன் திருமாவிற்கு ஆதரவாக மும்பை தாராவி பகுதியில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்.
நாள்: காவல் துறை அனுமதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்


சமத்துவ பொங்கலோ! பொங்கல்!!



சிந்தனைக்கான செய்திகளை மக்கள் மனதில் ஊன்ற அமைக்கப்பட்ட கருங்கல்



என்னுடைய சமூக பணிக்கு முழு விடுதலை உணர்வளித்திருக்கும் என் தாய்



பகுத்தறிவு கொள்கைகளை மாணவர்களிடம் கொண்டு செல்லும் களமாக உள்ள கதிர் வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர், மாணவர்கள் மற்றும் தோழர்கள்



சமூக ஆர்வலர், சீரிய பகுத்தறிவுவாதி சு.குமணராசனின் லெமூரியா இதழின் வாழ்த்து செய்தி



தமிழர்கள் ஓர் இனம் அதை சாதியோ, மதமோ பிரிக்க அனுமதிக்க இயலாது, பிரிந்த இனச் சகோதரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி



குழுப்படம்



இஸ்லாமிய தமிழ்ச்சகோதரியின் தமிழ் பொங்கல்



பகுத்தறிவை வாழ்வியலாகக் கொண்ட தோழரின் இனிய பொங்கல்



சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வனின் தமிழார்வ ஆதரவுள்ள உறுதுணை



அய்யா சாகுல் அமீதுவின் வாழ்த்துரை



தமிழ் மூதாட்டியின் பொங்கல்


எங்கள் இயக்கத்தின் முதலாமாண்டு பொங்கல் நிகழ்வுக்கு முழு உறுதுணையாக இயக்க தலைவரின் சகோதரி


எங்களோடு விழித்திருந்து உறுதுணையாக பணிகள் சிறப்பாக அமைய ஆலோசனைகளை வழங்கிய விழித்தெழு இயக்கத்தின் ஒரு குடும்பம்
விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் சமத்துவ பொங்கல் திருவிழா மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.
மும்பை தாராவி குறுக்கு சாலைப் பகுதியில் புதிதாக இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ள விழித்தெழு இளைஞர் இயக்கம் தம் இனவுணர்வினை வெளிப்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் நிகழ்வை தமிழ் புத்தாண்டு முதல் நாளன்று சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.இதன் விபரம் மேலும் வருமாறு, தமிழர்களின் ஒற்றுமையாக இருக்கும் ஒற்றுமையின்மையை களையும் நோக்கோடும், பொங்கல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உரியது என்பதை நிறுவும் பொருட்டும் இவ்வியக்க இளைஞர்களால் சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 5:30 மணியளவிலேயே மக்கள் திரளாக கூடிவிட்டனர். ஆதி திராவிட மகாசன் சங்க தலைவர் திரு. அசோக்குமார் அவர்களும், திரு. சாகுல் அமீது அவர்களும் தொடங்கி வைக்க நிகழ்வு 6 மணிக்கு தொடங்கியது.நிகழ்வின் சிறப்பாக தமிழர்களின் ஒற்றுமையை கண்கூடாக பார்க்க முடிந்தது. சாதி, மத வேறுபாடின்றி மக்கள் மகிழ்ச்சியோடு பொங்கல் சமைக்க தொடங்கினர். இனவுணர்வாளர்களும், கதிர் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களும், திராவிடர் கழக தோழர்களும் தன்னார்வத்தோடு இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற சேர்ந்து பணியாற்றினர். ஜேபிஆர் ஸ்போர்ட்ஸ் க்ளப், சன் இளைஞர் அணி, மனித உரிமைக் கழகம், கருஞ்சிறுத்தைகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், தமிழ் லெமூரியா திங்களிதழ், திமுக ஆகியோர் இயக்கத்தை பாராட்டி விளம்பர பதாகைகள் வைத்திருந்தினர். குறுக்குசாலை மெய்யாகவே சமஎண்ணம் கொண்ட குட்டித்தமிழ்நாடு போல் காட்சியளித்தது. நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் தோழர் கேப்டன் தமிழ்ச்செல்வன் இயக்கத்தோழர்களின் இனவுணர்வை வெகுவாக பாராட்டினார், மேலும் இப்படிப்பட்ட தோழர்களை ஊக்குவிப்பது தம் கடமையென்றும், அதை தன் உயிருள்ளுவரை செய்யப் போவதாகவும் கூறினார்.தாராவியில் வெகுவாக அறியப்பட்ட சமூகத்தொண்டர் சந்திரசேகர் அவர்களும் தோழர்களை வியந்து பாராட்டினார். திராவிடர் கழகத்தலைவர் தோழர் கணேசன் அவர்கள் கொள்கை நழுவாது, பகுத்தறிவோடு, தமிழர்களை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பிக்கையோடு கூறினார்.திராவிடர் கழகத்தோழர்கள், பகுசன் சமாஜ் கட்சி தோழர் இராமகிருஷ்ணன், திருவள்ளுவர் நற்பணி இயக்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், தேசியவாத காங்கிரஸ் தோழர் முருகேஸ், தமிழ் ஓட்டுனர்கள் சங்கத் தலைவர் தம்பிராஜ், மும்பை தேமுதிக செயலாளர் கதிர், வழக்கறிஞர் முருகசீலன், மற்றும் சித்தார்த் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி தோழர்கள், கதிர் வகுப்பு மாணவர்கள் என பல்வேறு அமைப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வு முடிந்த பின், பலர் வெகுவாக பாராட்டினாலும், பாராட்டுதலின் மைய்யப்புள்ளி தமிழர்கள் சாதி, வேற்றுமையை கடக்க ஆவலோடு இருக்கிறார்கள், ஆனால், சமூக அமைப்புதான் கட்டுக்குள் சிறை வைத்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது.
இடுகையிட்டது மகிழ்நன்

NELLAI.D.S.SRITHAR

VEERAN MUTHUKUMARAN

விழித்தெழு இளைஞர் இயக்கம்
இது மும்பையில் இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டுள்ள இயக்கம். இவ்வியக்கத்தின் நோக்கம்:- இளைஞர்களை சமூக நற்பணிகளில் ஈடுபடுத்தி சமூக அக்கறை வரவழைப்பது. வீணாக சீரழிந்து போகும் இளைஞர்களின் ஆற்றலை ஒன்றுதிரட்டி சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பை மேற்கொள்வது. மேலும், நோக்கங்களும் திட்டங்களும், செயல்பாடுகளின் ஊடாக, பதிவுகளாக வெளிப்படும், காத்திருங்கள்
மும்பையில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்தும், முத்துகுமரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம்

நாள்: 8,சனவரி 2009 எம் இளைஞர் படை ஒலி-ஒளிப்படமாக காண்பிக்கப்பட்ட ஈழ அவலத்தை பார்த்து கலங்கி நிற்கும் எம் உறவுகள் குமணராசன் உரையாற்றுகிறார் ஜெயக்காண்டீபனின் ஈழ வரலாற்றை தெளிவுபடுத்தும் உரை மாறன் நாயகம் உரையாற்றுகிறார் நான் மும்பை திராவிடர் கழக தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.எஸ். அன்பழகன் உரையாற்றுகிறார் எங்கள் அமைப்பாளர் தோழர் பாண்டியன் பெரியார் பெருந்தொண்டர் வே.சித்தார்த்தனின் ஆவேச உரை திருவள்ளுவர் நற்பணி இயக்க தலைவர் ராதா கிருட்டிணன் ஐயா பால்வண்ணன் பிஜேபி தென்னிந்திய பிரிவை சார்ந்த நடேசன் அவர்கள் மாவீரன் முத்துக்குமரன் ..

NELLAI.D.S.SRITHAR

MUMBAI HUMAN CHAIN
Monday, March 2, 2009
table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து "விழித்தெழு இளைஞர் இயக்கம்" தமிழர்களை ஒருங்கிணைத்து நடத்திய மாபெரும் மனிதச்சங்கிலி






மும்பையில் விழித்தெழு இயக்கத்தின் தோழர்களின் கடும் முயற்சியாலும், உண்மையான அரசியல் கலக்காத தமிழ் இன உணர்வாலும், சாதி மதம் கடந்து ஒட்டு மொத்த தமிழினமும் கலந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தாலும், மக்களின் உள்ளத்தில் உள்ள விருப்பத்தை சரியாக புரிந்து கொண்டதாலும் தோழர்கள் தமிழர்களை தமிழ்ச்சாதி என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.அறிவிப்பு வெளியான உடனேயே, மக்களின் ஆதரவும்,எதிர்பார்ப்பும், தொலைபேசி வாயிலாகவும்,நேரடியாகவும் தெரிவிக்கப்பட்டது. பல தொண்டு நிறுவனங்களும், தன்னலம் கருதாத சமூக ஆர்வலர்களும் தங்களுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் நீர் விநியோகம், மோர் விநியோகம் போன்ற உதவிகளை செய்வதாக கூறினர். தோழர்களும் தமிழர்களின் ஒருங்கிணைப்பு கருதி ஒப்புக் கொண்டனர். முன்னேற்பாடாக தோழர்கள் குறுஞ்செய்தி வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் விளம்பரம் செய்தனர். தன்னலமற்ற தமிழின உணர்வாளர்கள் தானாகவே முன்வந்து தங்கள் ஆதரவை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தும், விளம்பர பதாகைகளில் விளம்பரம் செய்தும், போராட்ட ஏற்பாடு உதவி என தங்கள் ஆதரவை பதிவு செய்திருந்தனர்.

இதில் குறிப்பிடத்தக்கவர்கள் சு. குமணராசன்(தானா), சித்தார்த்தன்(தானா), ராஜேந்திரசுவாமி(செம்பூர்), தமிழ்ச்செல்வன்(சயான்),ஏ பி சுரேஷ்(செம்பூர்),எவரெஸ்ட் நகர்(கரூண்), புதியமாதவி(முலுண்ட்), பாண்டூப்(சமீரா மீரான்), கதிரவன்(தாராவி), தென்னிந்திய முஸ்லீம் சங்கம் (தாராவி), மணி டிஜிட்டல்(தாராவி), கதிரவன் (பெரியார் திக), நாடோடித்தமிழன் (உலகத்தமிழர் பேரமைப்பு), பால்வண்ணன், ராசேந்திரன் (தமிழ் காப்போம்), இளங்கோ (மும்பை தமிழ் டாட் காம்), அ கணேசன் (தமிழ் இன உணர்வாளர்), மும்பை டிரைவர் சங்கம், பசுமைத்தாயகம், மும்பையில் உள்ள பல்வேறு தமிழ்சங்கங்கள், வருத்தபடாத வாலிபர் சங்கம், விஜய் நற்பணி மன்றம், ரவிச்சந்திரன் (பகுத்தறிவாளர் கழகம்) , மாறன் நாயகம்(அம்பேத்கர் அறக்கட்டளை), அசோக் குமார்(தாராவி), சிறுத்தை செல்வராஜ், அசோக்குமார்(தாராவி), முத்துராமலிங்கம்(கல்யாண்யவாடி), விக்ரம் ரசிகர் மன்றம், ஜெரிமேரி சங்கர், சங்கர் திராவிட், சீனிவாசன்(தாராவி), நடேசன்(தாராவி) மற்றும் பெயர் சொல்லி அழைத்தால் நீண்டு கொண்டே போகும் அளவுக்கு ஆதரவளித்தன நல்ல தன்னலமற்ற தமிழ் உள்ளங்கள்.

மனிதச்சங்கிலி போராட்டம் மாதுங்கா கிங்க்ஸ் சர்க்கிள் தொடங்கி தானே வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போராட்டம் சரியாக மதியம் 3 மணியளவில் தொடங்கியது. போரட்டத்தை ஒரு தமிழ் சிறுமி தொடங்கி வைத்தார். மக்கள் சாதி-மதம் கடந்து திரள் திரளாக இனவுணர்வோடும் மனிதாபிமானத்தோடு கலந்து கொண்டனர். இந்திய அரசே ஈழ மக்களை காப்பாற்று, ஈழ மக்களின் விடுதலை போராட்டத்தை அங்கீகரி, இலங்கை இனவெறி அரசே போரை நிறுத்து, கொல்லாதே! தமிழர்களை கொல்லாதே!! போன்ற உணர்வுப்பூர்வமான கோசங்கள் எழுப்பப்பட்டன.

25 கிமீ தொலைவுக்கு மேலாக 25,000 மேற்பட்ட எண்ணிக்கையில் நம் இனச்சகோதரர்கள் மூன்று மணி நேரம் குறுகிய அடையாளங்களை விட்டு தமிழர்களாக அணிதிரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. “சில விளம்பர பிரியர்கள் தங்கள் குறுகிய அரசியல் லாபங்களுக்காக, தற்பெருமைக்காக முயற்சி செய்தனர், மக்களே அவர்களை களத்தில் புறக்கணித்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது. மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த விழிப்புணர்வு மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும், அதோடு இந்த போராட்டத்திற்காக இராப்பகலாக ஒருவாரத்திற்கும் மேலாக தங்களுடைய அலுவல் பணிகளுக்கும் மத்தியில் உழைத்த தோழர்கள் பாண்டியன், சிரிதர், மகிழ்நன்,தமீம் அன்சாரி, மல்லி மகேசு, மாதவன், கதிர், அன்பு, சுரேஷ், சதீஸ், சுந்தர், அரூண், ஜெபஸ்டீன், முருகன், கணேசன், கண்ணன், அசோக், பெ. கணேசன், கண்ணன் மற்றும் இன்ன பிற தோழர்கள் அனைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று விழித்தெழு இளைஞர் இயக்கத் தலைவர் உ.பன்னீர் செல்வம் கூறினார்

-- அன்பும் ,பகுத்தறிவுடனும். மகிழ்நன்.
செயலாளர்,
விழித்தெழு இளைஞர் இயக்கம்+919769137032 தாராவி, மும்பை http://periyaryouth.blogspot.com http://makizhnan.wordpress.com http://kayalmakizhnan.blogspot.com http://scientifictamil.blogspot.com http://vizhithezhuiyakkam.blogspot.com

செய்திகள் வந்த இணையங்கள்
http://hamaraphotos.com/news/national/tamil-supporters-protest-over-sri-lankan-issue-in-mumbai.ஹ்த்ம்ல்
http://www.3dsyndication.com/showarticle.aspx%3Fnid%3DDNMUM125825
http://www.thaindian.com/newsportal/india-news/tamil-supporters-protest-over-sri-lankan-issue-in-mumbai_100161399.html
http://www.littleabout.com/2009/03/01/tamil-supporters-protest-over-sri-lankan-issue-in-mumbai/
http://rtv.rtrlondon.co.uk/2009-03-01/560b9af.html
http://www.andhranews.net/India/2009/March/1-Tamil-supporters-protest-92492.asp
http://news.krify.com/print/74030.html
http://news.webindia123.com/news/articles/India/20090301/1188884.html
http://www.sibernews.com/200903022117/
http://feeds.bignewsnetwork.com/index.php?sid=472703
http://www.newstrackindia.com/newsdetails/70527
http://killingoftamilinsrilanka.blogspot.com/2009/03/20-km-human-chain-in-mumbai-to-draw.html
http://jackmyers.daylife.com/article/0eLBgNFfZw36H
http://www.tamilnewsnetwork.com/tamilnewsnetwork.com/post/2009/03/02/Tamil-supporters-protest-over-Sri-Lankan-issue-in-Mumbai.aspx
தமிழ் இணையங்களில்
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2556:-25----------&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2228&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
http://udaru.blogdrive.com/archive/937.html
http://suthumaathukal.blogspot.com/2009/03/25.html
இடுகையிட்டது மகிழ்நன் நேரம் 4:15 AM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: , ,

இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)
இனவழிப்பை நிறுத்துங்கள்





Tuesday, April 7, 2009

NELLAI.D.S.SRITHAR

VIZHITHEZHU IYAKKAM

யேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், நோர்வே, கனடா, சுவீடன், இத்தாலி, பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு மக்களுக்கு அழைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 06:56.44 AM GMT +05:30 ]
யேர்மனி, பிரான்ஸ், சுவிசிஸ், நோர்வே, பாரிஸ், பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களின் ஆதரவையும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள் கோரி நிற்கின்றார்கள்.
இத்தாலி வாழ் எம் தேசத்தின் உறவுகளே!சுவிசிஸ் ஐ.நா முன்பாக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இன்று (செவ்வாய்) மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. வன்னியில் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. பிற்பகல் 2:00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள ஆர்ப்பாட்டம் காலத்தின் தேவை கருதி சில வேளைகளில் காலவரையறையற்ற போராட்டமாக மாறும் என்பதால் தமிழ் உறவுகள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில் மக்கள் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஆரம்பித்துள்ள தன்னெழுச்சிப் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், அதிகளவிலான தமிழ் மக்கள் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யேர்மனியில் இன்று முதல் காலவரையறையற்ற போராட்டம் யேர்னியில் டுசுல்டோர்ப் பிரதான தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11:00 மணி முதல் காலவரையறையற்ற ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. வன்னியில் பாரிய மனித அவலத்தின் மத்தியில் தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசுக்கு யேர்மனி அரசாங்கம் அழுத்தம் கொடுத்து போரை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற போராட்டங்களின் வரைசையில் யேர்மனியிலும் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி டுசல்டோவ் நாடாளுமன்றத்திற்கு (düsseldorf landtag) முன்பாக (தொடர்புகளுக்கு: (49) 1633125311) நோர்வேயில் பிரதமர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் வன்னி மக்களின் அவலத்தைத் தடுத்து உடனடி போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தி நோர்வே பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. பிரதமர் தனது அலுவலகத்திற்கு முன்பாக காலை 10:00 மணியளவில் மக்கள் ஒன்றுகூடுமாறு நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. வன்னியிலுள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த முற்படுவதாக தகவல் வெளியாகி இருப்பதுடன், அவ்வாறு தாக்குதல் நடத்தினால் பல இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசு மீதான அனைத்துலக அழுத்தம் உடனடியாகப் பிரயோகிக்கப்பட்டு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், இதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் கிழர்ந்தெழ வேண்டும் எனவும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் நேற்று முன்னாள் (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு விடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது. இது தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:- எமது இனத்தை கொடிய அழிவில் இருந்து காத்திட, உடனடிப் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு நோர்வே அரசாங்கம் உரிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த அணி திரள்வோம். எமது சொந்த அலுவல்களை நாளை ஒதுக்கி வைத்து எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம். அனைவரும் வீதிக்கு இறங்குவோம் என்று அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தலைமை அமைச்சர் அலுவலகமானது, VG நாளிதழ் அலுவலகம் மற்றும் Deichmanske bibliotek (தலைமை நூலகம்) ஆகியன அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் Akersgata 42, 0030 OSLO முகவரியில் அமைந்துள்ளது) பாரிஸ் நகரின் இன்வலிட் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் முன்றலில் நேற்று பிற்பகல் 3:00 மணியில் இருந்து ஒன்றுதிரண்ட தமிழர்கள் அதனை தொடர் போராட்டமாக மாற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரெஞ்சு அரசாங்கம் முடிவு ஒன்றினை தெரியப்படுத்தும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் முழக்கங்களை எழுப்பியபடி எழுச்சியுடன் காணப்படுவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார். லண்டனில் தொடர்கிறது போராட்டம் இதேவேளையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து நேற்று திங்கட்கிழமை கிளர்ந்தெழுந்த தமிழ் மக்கள், வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முன்றலில் தொடர்ச்சியாக மகிந்த அரசாங்கத்தின் தமிழின இனப் படுகொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
கனடாவில். கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும் உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கனடிய அரசையும் கனடிய பிரதமர் ஸ்டீபன் காப்பரையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் நாள்தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். நாள்தோறும் காலை 7:00 மணிக்கு 1199 கென்னடி வீதியில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் Banquet மண்டபத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உரிய பேருந்துகள் புறப்படவுள்ளன. பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர் எண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சுயமாக வாகன வசதி கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றனர். பேருந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும். பேருந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020 ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925
சுவீடனில் சுவீடன் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்துக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது: எமது தாயக உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் இன அழிப்பு போரில் இருந்து இருந்து காக்க, சுவீடன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இத்தாலி வாழ் எம் தேசத்தின் உறவுகளே! இனவாத அரசின் எறிகணை வீச்சிலும் எரிகுண்டு வீச்சிலும் எம்தேசமும் தேசத்தின் உறவுகளும் எரிந்து கொண்டிருக்கிறார்கள். அழிவுகளைக் கண்டு அழுது கொண்டிருக்கும் நேரமல்ல இது. வீதியில் இறங்கி குரல் கொடுத்து எம் மக்களை பாதுகாக்க சர்வதேசத்தின் முன் இறுதியாக ஒங்கி குரல் கொடுக்கும் இறுதிக்கணம் இது.
எம் தாயகத்தையும் தேசியத்தையும் சுதந்திரத்தையும் தாயகத்து உறவுகளையும் இழந்து நாம் தமிழர்களாக வாழ முடியுமா? தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசம் எங்கும் மக்கள் வீதியில் இறங்கி போராடும் இவ்வேளையில் இத்தாலி வாழ் தமிழீழ மக்களாகிய நாமும் இன்றே வீதிகளில் இறங்கி தொடர்ந்து குரல் கொடுப்போம். தேசத்தை அழிவில் இருந்து காப்போம்.இடம் : பியாட்சா இன்டிபென்டென்சாநேரம் : 15:00 மாலைகாலம் : 07-04-2009அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.சாவுக்குள் வாழும் எம் சந்ததிகளை காக்க.பலெர்மோ வாழ் தமிழீழமக்கள
இன்று பிற்பகல் 2:00 மணியில் இருந்து தொடர்ச்சியாக இப்போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இதில் சுவீடன் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

Monday, April 6, 2009

விழித்தெழு இளைஞர் இயக்கம்

விழித்தெழு இளைஞர் இயக்கம்

ஒழுக்கத்தைவிட பக்தி முக்கியமானதா?
இன்று நாம் மக்களிடையில் பார்ப்பனர்களும், அவர்களது பத்திரிகைகளும், குருமார்கள் என்பவர்களும் கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும் என்பதையே முழு மூச்சாகக் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்ஒழுக்கமா? பக்தியா?பார்ப்பனத் தலைவரான ராஜாஜி அவர்கள், இன்று நேற்றல்லாமல் பல ஆண்டுகளாகவே, மக்கள் “கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும்” என்பதையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி செய்து வருவதில் இவர்,”ஒழுக்கத்தைவிட பக்தியே முக்கியமானது” என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கட்கு இன்று பக்தியைப் பற்றி இவ்வளவு அக்கறை வந்ததன் காரணம் என்ன என்பதை மக்கள் முதலில் சிந்திக்க வேண்டும்.பக்தி ஆடுகிறது.நம் நாட்டு மக்கள் இன்று ஏராளமாக அதாவது 100க்கு 50 பேருக்கு மேல் கல்வி அறிவு ஏற்படும்படி ஆக்கிய பின்பும், சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம் ஏற்பட்ட பின்பும் பலமான பிரச்சாரம் நடந்து வருவதுடன் பெரும்பாலான மக்களுக்கு இயற்கையாகவே கடவுள், மத நம்பிக்கைகளில் பெரும் ஆட்டம் கொடுத்து விட்டது.மாணவர்கள் இடையிலும் ஆதாரம் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் இடையிலும், கடவுள், மத நம்பிக்கை பெரிதும் குறைந்து வருகிறது. இந்த மனித சமுதாயத்தில் இன்று இருந்துவரும் ஜாதிப் பாகுபாடு அடியோடு அழியும்படியான தன்மையை உண்டாக்கி வருகிறது.மற்றொரு கேடுஇது மாத்திரமல்லாமல் பார்ப்பனரின் வாழ்வுக்கு கடவும், மதம் மாத்திரமல்லாமல், மற்றொரு ஆதாரமாயிருந்த அரசியலிலும் புகுந்து, பார்ப்பனரின் (சாதி) உயர்வுக்கு மற்றொரு கேட்டினையும் அளித்துவருவதாக ஆகிவிட்டது. எனவேதான், பார்ப்பனர்கள் நம் மக்களை கடவுள், மத, பக்தியின் பெயரால் முட்டாள்களாக ஆக்குவதிலும், கல்வியின் பெயரால் நம்மவர்களை தரமற்றவர், திறமையற்றவர் என்பதாக ஆக்குவதிலும் தீவிர முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.அதன் காரணமாகவே, இன்று பார்ப்பனர், பார்ப்பனத் தலைவர்கள், அவர்களது குருமார்கள், பார்ப்பனப் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவரும் பக்திப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி விட்டார்கள்.எல்லாம் சுயநலம்சாதாரணமாக “பக்தி” என்பது ஒரு மனிதனுக்கு வெறும் பச்சைச் சுயநலமே ஒழிய, அதனால் மற்ற மக்கள் எவருக்கும் எவ்விதப் பயனும் இல்லை என்று நான் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கூறி வந்திருக்கிறேன்.இது, பார்ப்பனரின் உயர் வாழ்வுக்கும், நம் இழிதன்மைக்குந்தான் பயன்படுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. ஆகவே பக்தி என்பதெல்லாம் முட்டாள்தனமும், புரட்டும், பயனற்ற தன்மையும் கொண்டது தான் என்பதை நம் மக்கள் இனிமேலாவது உணர வேண்டும்.லஞ்சப்பேர்வழிகளின் பூசைசமுதாயத்தில் பெரும்கேடு விளையக்காரணமாக இருப்பவர்களும் பெரும் லஞ்சம் பேர்வழிகளும் தான் பூசை, வணக்கம், பக்தி என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு பெரிதுபடுத்துவார்கள்; துள்ளிக் குதிப்பார்கள்.அதிக பக்தி, பூசை, தானம், தர்மம், உபயம், கட்டளை உள்ள வியாபாரிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆகவே, மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஒருவித ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதன் காரணமாக உண்டானது தானே ஒழிய, மனிதர்களை ஒழுக்கமுடையவர்களாக்கவோ, மற்றவர்களுக்குப் பயன்படும்படிச் செய்யவோ அல்ல என்பதை அறிவுள்ளவர்கள் - சிந்திக்கத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக நம்பி உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.தந்தை பெரியார் - நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 34-35

NELLAI.D.S.SRITHAR

NELLAI.D.S.SRITHAR

ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?அம்பேத்கர்

லக்னோவில் 25.4.1948 அன்று, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு மாநாட்டில் நான் நிகழ்த்திய உரையைத் திரித்தும் சிதைத்தும் வெளியிட்டிருப்பதைக் கண்டேன். எனது தோழர்களுக்கு எதிராக நான் பண்பற்ற வார்த்தைகளைக் கூறியதாக, உள்ளூர் பத்திரிகை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது கேட்டு மனம் புண்பட்டுள்ளேன் என்பதைச் சுருக்கமாகக் கூறுவது அவசியமாகிறது. எனது உரையில் கண்ட அம்சங்களை கீழே தருகிறேன். எனக்கெதிராகத் தொடுக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு பதில் சொல்லுவதே இதன் நோக்கம் : 1. அமைச்சரவைக் குழு வந்து சென்ற பிறகு நான் ஏன் அமைதி காத்தேன்? 2. காங்கிரஸ் அரசில் நான் ஏன் இணைந்து கொண்டேன்? 3. எதிர்காலத்தில் நான் செய்யப் போவது என்ன?முதல் கேள்விக்கு எனது பதில் : பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, அரசியல் பாதுகாப்பை கோரியது. இதில் முக்கியமானது தனி வாக்காளர் தொகுதி. ஆரம்ப கட்டத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், பட்டியல் சாதியினர் முழுமையும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது புரியும். இப்படி இருந்தும் நமது அமைச்சரவைக் குழுவினால் அது நிராகரிக்கப்பட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன : 1. முஸ்லிம்களுடனோ, சீக்கியர்களுடனோ ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நாம் ஒரு பலவீனமான கட்சியாக இருந்தோம் 2. நமது அணி பிளவுபட்டிருந்தது. இதில் காட்டிக் கொடுப்போர் பலர் இருந்தனர்.அமைச்சரவைக் குழுவின் முடிவுகள், பட்டியல் சாதியினரை ஒழித்துக்கட்டிவிடக் கூடியதாக இருந்தது. ஒரு தனி அமைப்பாக அது இல்லாமல் போகும் சாத்தியம் இருந்தது. அரசியல் பாதுகாப்பின்றி பட்டியல் சாதியினர் துடைத்தெறியப்பட்டிருப்பர். எனக்கு முன்னால் பேரிருள் தெரிந்ததால்தான் நான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இரண்டாவது கோள்விக்கு எனது பதில் : நான் காங்கிரசை எதிர்ப்பவனாகவும் தாக்கிப் பேசுபவனாகவும் இருந்தது உண்மைதான். அதே நேரத்தில் எதிர்ப்புக் காட்டுவதற்காகவே எதிரியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. ஒத்துழைப்பு மனப்பான்மை இருத்தல் வேண்டும். காங்கிரசை எதிர்த்துப் போராடுவதில் பயனில்லை என்று நான் கருதினேன். எனவே, காங்கிரசுடன் ஒத்துழைப்பது என்று முடிவு செய்தேன். இந்த ஒத்துழைப்பு மூலம்அரசியல் சாசனத்தில் நமக்கு சில பாதுகாப்புகள் கிடைத்தன. இந்த ஒத்துழைப்பு இல்லையென்றால், நமக்கு இப்பாதுகாப்புகள் கிடைத்திருக்காது.நான் அமைச்சரவையில் சேர்ந்துள்ளது குறித்து : இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதற்கு என்னிடம் இரண்டு காரணங்கள் இருந்தன : 1. இந்த அழைப்பின்போது எனக்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை 2. பட்டியல் சாதியினருக்கு வெளியிலிருந்து செய்வதை விட, அரசாங்கத்தில் பங்கேற்று சிறப்பாகப் பணியாற்ற முடியும்.பட்டியல் சாதியினருக்குப் பாதகமாக மோசமான சட்டங்கள் இயற்றப்படும் என்று அவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் எதற்காக அஞ்ச வேண்டும் என்றால், மோசமான நிர்வாகத்திற்குதான். நிர்வாகத்தினர், பட்டியல் சாதியினருக்கு எதிராக செயல்படுவதற்குக் காரணம், அதில் சாதி இந்து அதிகாரிகள் இருந்து கொண்டு, கிராமத்திலுள்ள சாதி இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, பட்டியல் சாதியினரிடம் வலுக்கட்டாய வேலை வாங்கி, ஒவ்வொரு நாளும் அவர்களை கொடுமையாக அடக்கி ஒடுக்கி வருகின்றனர். இந்தக் கொடுமை யையும் ஒடுக்குமுறையையும் ஒழிக்க வேண்டுமெனில், பட்டியல் சாதியினர் பொது நிர்வாகப் பணியில் இருக்க வேண்டும். இதற்கு வசதியாக நாம் அரசாங்கத்தில் பங்கேற்று செயல்பட வேண்டும்; வெளியிலிருந்தல்ல.பின்னர், பட்டியல் சாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்று சொன்னேன். மாநாட்டில் பங்கேற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கியே நான் இதைக் கூறினேன். இரண்டு வகுப்பினரின் தேவைகளும் ஒன்றாக இருக்கும்போது, அவர்கள் ஒன்றிணையாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினருடன் இணைவதற்கு ஏன் தயாராக இல்லை என்றால், இந்த ஒற்றுமையினால் பட்டியல் சாதியினரின் நிலைக்கு அவர்களும் தாழ்த்தப்பட்டு விடுவார்களோ என்று அஞ்சுகின்றனர்.பட்டியல் சாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையில் விருந்துகளும் திருமணங்களும் நடைபெற வேண்டும் என்று நான் விரும்பவில்லை. தனித்தனி சமூக அமைப்புகளாகவே அவை இருக்கும். ஆனால் தங்களது பின்தங்கிய நிலைமையை போக்கிக் கொள்வதற்காக, அவர்கள் ஏன் ஓர் அரசியல் கட்சி அமைத்துக் கொள்வதற்கு ஒன்றுபடக் கூடாது? தமது நிலைமைகளை அரசியல் பணிகள் மூலம் ஓரளவுக்கு பட்டியல் சாதியினர் முன்னேற்றிக் கொண்டுள்ளது போல, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ஏன் செய்து கொள்ளக் கூடாது?இந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர், பட்டியல் சாதியினரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாரும்தான் என்று நான் சுட்டிக் காட்டினேன். அவர்கள் இந்த நாட்டை ஏன் ஆளக்கூடாது என்பதற்கு காரணம் ஏதுமில்லை. வயது வந்தோர் வாக்குரிமை உள்ளதால், உங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு, நீங்கள் அமைப்பு ரீதியில் ஒன்றுபடுவது மிகவும் அவசியம். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(3), பக்கம் 391

பிரபாகரன் இல்லாத தீர்வு : சோனியா அரசின் சதித்திட்டம்

பிரபாகரன் இல்லாத தீர்வு : சோனியா அரசின் சதித்திட்டம் கி.வெங்கட்ராமன்
மக்களின் உரிமை முழக்கங்களை தொடக்கத்தில் அடக்க முயலும் ஆளும் சக்திகள், அந்த முழக்கங்கள் மக்களின் ஆதரவு பெற்று வலுப்பெறும்போது அவற்றையே நீர்த்துப்போகச்செய்து, திசைத் திருப்பி மக்களைக் குழப்புவது வாடிக்கை. "சோசலிசம்’, 'புரட்சி’ போன்றவை செல்வாக்கு பெற்றபோது அவற்றை பொருளற்ற வகையில் நீர்த்துப்போகச் செய்து தமதாக்கிக்கொள்ள ஆளும் வர்க்கங்கள் முயன்றதை வரலாறு கண்டிருக்கிறது.அடிப்படை இலக்குக் குறித்த முழக்கங்களையே திசைத் திருப்பிவிடும் ஆளும் வர்க்கங்கள் மக்களது உரிமைப் போராட்டங்களில் எழுப்பப்படும் இடைக்கால முழக்கங்களையும் திசைத்திருப்பிவிடுவது எளிதில் நடக்கிறது.“ஈழத்தில் போர் நிறுத்தம்’’ என்ற தமிழக மக்களின் கோரிக்கை முழக்கத்தை முதலில் தில்லி ஆட்சியாளர்கள் வெளிப்படையாக நிராகரித்தார்கள். அனைத்துக்கட்சி கோரிக்கையை தொடர்ந்து தமிழக முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி “போர்நிறுத்தம் கோரமாட்டோம்.’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். நாடாளுமன்றத்திலும் இதையே அறிவித்தார். ஆனால் “போரை நிறுத்து’ என்ற முழக்கம் கட்சி வரம்புகளைக்கடந்து ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை முழக்கமாக வலுப்பெற்றது.திரைத்துறையினர், சின்னத்திரையினர், வழக்குரைஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், பலவகை உடல் உழைப்பாளர்கள், உடல் ஊனமுற்றோர், திருநங்கைகள்.... என அனைத்துத் தரப்பினரும் போர்நிறுத்தம் கோரிப் போராட்டங்கள் நடத்தினர். மாவீரன் முத்துக்குமார் தீக்குளிப்பு, தேர்தல் கட்சிகளுக்கு வெளியே தமிழ்நாட்டின் இளைஞர்களை பேரெழுச்சிகொள்ள வைத்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வழக்குரைஞர்கள் நடத்துகிற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம், கொடும் அடக்கு முறைகளுக்கிடையே தொடர்கிறது.இவ்வாறு போர் நிறுத்தக் கோரிக்கை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முழக்கமாக மாறிய பிறகு, உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, இந்த இன அழிப்புப்போரை வழி நடத்துவதே சோனியாகாந்தியின் இந்திய அரசுதான் என்ற உண்மை பாமரருக்கும் புரியத்தொடங்கியது. இந்திய அரசு கடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது.இந்த நிலையில் இந்திய அரசு போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று இலங்கை அரசைத் தானும் கோருவதாக அறிவித்தது. ஆனால் ஷபோர் நிறுத்தம்’ என்ற தனது கோரிக்கையோடு கொலைக்காரத்தனமான நிபந்தனை ஒன்றையும் இணைத்தது.ஆண்டுதோறும் இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமாக தொடங்குவது வழமை. அக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றுகிற உரை என்பது இந்திய அமைச்சரவையின் கொள்கை அறிவிப்பாகும். இவ்வாறான கூட்டுக் கூட்டம் கடந்த பிப்ரவாி 12, 2009 அன்று நடைபெற்று அதில் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார். அதில், பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்திய மறுநாள் இந்திய அரசு போர் நிறுத்தம் கோரிவிட்டதாக ஏடுகள் பலவும் தலைப்புச் செய்திகள் வெளியிட்டன.முதலமைச்சர் கருணாநிதி வழக்கம்போல் தில்லி அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கினார். ஆனால் போர் நிறுத்தக் கோரிக்கையோடு விடுதலைப்புலிகள் ஆய்தங்களைக் கீழேபோட முன்வரவேண்டும் என்ற நிபந்தனையை சூழ்ச்சியாக இணைத்திருப்பதை இவர்கள் வெளிப்படுத்தத் தவறினார்கள். போர் நிறுத்தம் என்ற மக்கள் கோரிக்கையை ஏற்பதுபோல் நடித்து ராஜபக்சே விரும்பும் மோசமான நிபந்தனையை ஈழத்தமிழர்கள் மேல் திணிக்கிற சூழ்ச்சித் திட்டமே இது. ஈழத்தமிழர்களின் உயிரையும், மானத்தையும், உரிமையையும், பாதுகாப்பதற்கு உள்ள ஒரே அரண் விடுதலைப்புலிகளின் ஆய்தப் போராட்டம்தான். விடுதலைப்புலிகளை ஆய்தம் அற்றவர்களாக மாற்றிவிட்டால், அதன்பிறகு போர் நிறுத்தம் என்ற கோரிக்கையே பொருளற்றதாகிறது.ஈழத்தமிழர்களை இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான அமைதிப் போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசால் இரத்த வௌ;ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட பிறகு, வேறு வழியே இல்லாமல் தொடங்கியதுதான் ஆய்தப் போராட்டம் என்ற வரலாறு இந்திய அரசுக்கு தெளிவாகத் தெரியும். ஆயினும் வேண்டுமென்றே -செயலுக்கு வரமுடியாத, இழிவுபடுத்தும் நிபந்தனையை இந்திய அரசு வலியுறுத்துகிறது. அயர்லாந்திலோ, பாலஸ்தீனத்திலோ, நேப்பாளத்திலோ வேறு எங்குமோ போர் நிறுத்தத்திற்கு இவ்வாறான நிபந்தனை விதிக்கப் பட்டதாக வரலாறு இல்லை. ஏனெனில் அரசு பயங்கரவாதத்திலிருந்து தம் மக்களைப் பாதுகாப்பதற்கு ஆய்தம் ஏந்திய விடுத லைப்படையானது.அடிப்படை பிரச்சினை தீர்ந்து நீடித்த அமைதி நிலவ உறுதியான ஏற்பாடுகள் நிலைபெறும் வரை ஆயுதங்களைக் கீழேபோட முடியாது. எந்தவொரு மக்கள் படையும், எந்தவொரு தேசிய இன விடுதலைப்படையும் இவ்வாறான நிபந்தனையை ஏற்காது என்ற உண்மை இந்திய அரசுக்கும் தொியும். ஆயினும் மக்களின் போராட்டத்தை மதித்துத் தானும் போர் நிறுத்தம் கோரியதாகப் படம் காட்டிக்கொண்டு தனது ஆதிக்க நடவடிக்கையைத் தொடர்கிற சூழ்ச்சியே இது.விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட முன்வராததால்தான் போர் தொடர்கிறது என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மக்களைக் குழப்பி பிளவு படுத்துவதற்கு இந்திய அரசு இவ்வாறு அறிவித்திருக்கிறது.தூத்துக்குடி அனல் மின்நிலையத் திறப்பு விழாவில் (28-02-2009) பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தற்காலிக சண்டை ஓய்வு (Pause) கோரியதும் இவ்வாறானதே. உண்மையில் போரை நிறுத்தாமல் மக்களை சிங்கள அரசின் பாதுகாப்பு வளையம் என்ற சித்திரவதை முகாமிற்கு வரவழைக்கிற சூழ்ச்சி வலையே இது. தூத்துக்குடி விழாவிலும், அடுத்தநாள் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடத்திலும், பிரணாப் முகர்ஜி அறிவித்தது புதிய செய்தி அல்ல. ஏற்கெனவே 2009 சனவரி 28 அன்று இலங்கையில் ராஜபக்சேயை சந்தித்த பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் தொிவித்த செய்திகள்தான் இவை.“ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்புமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது நிகழவேண்டுமென்றால் ஸ்ரீலங்கா அரசு தன்னுடைய படை நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும். அதே நேரத்தில் விடுதலைப்புலிகள் தங்களுடைய ஆய்தங்களைக் கீழேபோடவும், பேச்சு வார்த்தை தொடங்கவும் இசைவு தெரிவிக்கவேண்டும்’’ என்றார். “23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பெற்றுள்ள படைவெற்றி வடக்கு மாகாணத்திலும், இலங்கைத் தீவு முழுவதிலும் இயல்பு நிலையை மீண்டும் கொணருவதில் புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பதை நான் வலியுறுத்துகிறேன். 1987-ல் கையெழுத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு இசைய, செய்யப்பட்ட இலங்கை அரசமைப்புச் சட்ட 13-ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று இலங்கை குடியரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சே எனக்கு உறுதியளித்தார். இச்சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளதையும் தாண்டி கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு உள்ள வாய்ப்புகளையும் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் உறுதியளித்தார்’’.இலங்கை இனப் பிரச்சினை குறித்து 15-02-.2009 அன்று மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறை குறித்து விரிவாகக் கூறினார்.விடுதலைப்புலிகள் ஆய்தங்களைக் கைவிட இசைய வேண்டும் என்ற நிபந்தனையை மீண்டும் வலியுறுத்திய ப. சிதம்பரம் அங்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கு தமிழர்களின் ஒரே பேராளராக (பிரதிநிதியாக) விடுதலைப்புலிகளை ஏற்க முடியாது என்றும் கூறினார். பிரதீபா பாட்டீல் அறிக்கை, பிரணாப் முகர்ஜி அறிக்கை, ப. சிதம்பரம் பேச்சு ஆகியவற்றைத் தொகுத்து உற்று நோக்கினால் இந்திய அரசின் சூழ்ச்சித்திட்டம் புரியும்.தனி ஈழம் அல்ல்லாத தீரிர்வு;வு என்பது மட்டுமின்றி, புலிகள் அல்லாத தீர்வு என்பதும் இந்திய அரசின் திட்டமாக இருக்கிறது. எந்த்த சனநாயக நெறிமுறைகளுக்கும் உட்ப்படாத தனது புவிசார் அரசியல் ஆதிக்க நலனுக்காக இந்திய அரசு முன் வைக்கிற திட்டமே இது. ஏனெனில் தமிழீழத் தனி அரசு என்பதும், தமிழர்களின் ஒரே அரசியல் பேராளர் விடுதலைப்புலிகள்தான் என்பதும், சனநாயக வழியில் மெய்ப்பிக்கப்பட்ட உண்மை நிலவரம் ஆகும்.2004-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் ஒரே விழைவு தமிழீழத் தனி அரசுதான் என்றும், ஈழத்தமிழர்களின் ஒரே பேராளர் அமைப்பு பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள்தான் என்றும் அறிவித்து போட்டியிட்ட தமிழ்த் தேசிய கூட்டணியினர் தமிழீழப் பகுதியில் உள்ள 24 இடங்களில் 22 தொகுதிகளை வென்றனர். இது தமிழீழ மக்களின் கருத்து வாக்கெடுப்பாகவே கருதத் தக்கதாகும். இந்தத் தமிழ்த் தேசிய கூட்டணியில் ப்ளாட், டெலோ, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள்ளிட்ட அனைத்துத் தமிழீழ அமைப்புகளும் உறுப்பு வகிக்கின்றன. அவையெல்லாம் இணைந்து பெற்ற கருத்து வாக்கெடுப்புதான் இது.ஆனால் ஈழத்தமிழர்களின் இந்த சனநாயக விருப்பத்தைப் புறந்தள்ளிவிட்டு, தனது ஆதிக்கத் திட்டத்தைத் திணிப்பதிலேயே இந்திய அரசு குறியாக இருக்கிறது. எப்போதுமே வல்லரசுகள் தமது புவிசார் அரசியல் ஆதிக்க நலனோடு குறிப்பிட்ட தேச மக்களின் சனநாயக விருப்பங்கள் முரண்படுமானால், மக்களின் சனநாயக விருப்பங்களை தூக்கியெறிந்துவிட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவே முயலும் என்பது வரலாறு. மாசேதுங் இல்லாத சீனா, காஸ்ட்ரோ இல்லாத கியூபா, அராபத் இல்லாத பாலஸ்தீனம், சதாம் உசேன் இல்லாத ஈராக் என்று அமொிக்கா வலியுறுத்தியதையும் இப்போது ஹமாஸ் இல்லாத காஜா என்று வல்லரசுகள் வலியுறுத்தி வருவதையும் உலகம் பார்க்கிறது. மக்களின் ஆதரவைப் பெற்ற விடுதலை அமைப்புகளை புறந்தள்ளிவிட்டு தாங்கள் நட்டுவைக்கிற கையாட்கள் ஆட்சியை நிறுவுவதிலேயே ஆதிக்கவாதிகள் முனைப்பாக இருக்கிறார்கள். அதற்கேற்ப தேசியத் தாயகத்தை கூறு போடுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.எடுத்துக்காட்டாக அராஃபத் மறைவுக்குப்பிறகு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அப்பாஸ் முழுக்கமுழுக்க இஸ்ரேல்-அமெரிக்கக் கையாளாக மாறினார். ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களின் தேசியப் படையாக வடிவெடுத்தது. பாலஸ்தீன நிர்வாகத்திற்கு நடந்த தேர்தலிலும் ஹமாஸ் பெருவாரியான வெற்றியைப் பெற்றது.ஆயினும் இந்த சனநாயக முடிவை வல்லரசுகள் ஏற்கவில்லை. வல்லரசுகளின் கையடக்க அமைப்பான ஐ.நா. மன்றமும் ஏற்கவில்லை. இஸ்ரேலின் உளவுப்படையான மோசாத்தும், அமொிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ-வும் அப்பாஸை கூர்தீட்டிவிட்டு ஹமாஸோடு மோத விட்டன. பல்வேறு அமைதி முயற்சிகள் தோற்றுப்போனதற்குப் பிறகு வேறு வழியின்றி பி.எல்.ஓ.வோடு ஹமாஸ் போரிடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனை சகோதரச் சண்டை என வல்லரசுகளின் ஊதுகுழல்கள் தூற்றின. மேற்குக் கரையில் அப்பாஸ் ஆட்சியும் காஜா பகுதியில் ஹமாஸின் ஆட்சியும் நடைபெறுகின்றன. ஹமாஸ் ஆட்சிக்கு எதிராக என்று சொல்லி காஜா பகுதியின் பாலஸ்தீன மக்களை இனக்கொலை புரிந்துவருகிறது இஸ்ரேல்-அமெரிக்க அச்சு அரசுகள்.இதேபோல் இந்திய அரசு அதன் உளவு அமைப்பான ”ரா’ மூலம் போட்டிக் குழுக்களை கூர் தீட்டிவிட்டு விடுதலைப்புலிகளோடு மோதலை ஏற்படுத்தி தமிழீழ தேசியப் போராட்டத்தை சீர்குலைப்பதை தொடர் பணியாக செய்துவருகிறது. இதனை இந்திய அமைதிப்படையின் தலைமைத் தளபதியாக பணியாற்றிய ஹர்கிரத்சிங் தமது இலங்i;கையில் தலையீடு (Intervention in Sri Lanka) என்ற நூலில் எடுத்துக்கூறுகிறார்.“எந்த அமைப்பு வலுவும், அரசியல் இலக்கும் இல்லாத டெலோ அமைப்பைத் தொடக்கத்தில் "ரா’ தேர்ந்தெடுத்தது. டெலோ குழுவில் பெரும் குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் இருந்தனர். அவர்களுக்கு ஈழம் தொடர்பான எந்தக் கருத்தியல் உறுதிப்பாடும் இல்லை. தனது கையடக்கமான அமைப்பாக அதனை ஷரா’ உருவாக்கியது. அதேபோல் இ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பையும் ஆயுதபாணியாக்கியது....................... 1986-ல் டெலோவை விடுதலைப்புலிகள் ஒடுக்கினர். இந்திய அரசின் வெளியுறவுத் துறையும் "ரா’வும் இணைந்து இ.பி.ஆர்.எல்.எஃப்.-ஐ வலுவுட்டின. 1990-ஆம் ஆண்டில் ஒருநாள் இதற்கு பொறுப்பான "ரா’ அதிகாரியை நான் சந்திக்க நேர்ந்தபோது இந்த உண்மையை அவர் உறுதிப்படுத்தினார். 1988-இல் இந்திய அமைதிப்படை தலைமைத் தளபதி கல்கத் இ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு ஏராளமான ஏ.கே. 47 துப்பாக்கிகளையும் பெரும் அளவிலான ஆய்தங்களையும் வாரி வழங்கினார். "ரா’ அமைப்பின் தூண்டுதலால் குழுச்சண்டைகள் தீவிரம் பெற்றன. விடுதலைப் புலிகளை ஒடுக்கி வைப்பது மைய நோக்கமாக இருந்தது’’ (மேற்படி நூல் பக்கம் 23,24)இவ்வாறான சீர்குலைவு முயற்சிகள் மட்டுமின்றி, பேச்சு வார்த்தைக்கு வரும்போது பிரபாகரனைக் கொன்றுவிட வேண்டும் என்ற திட்டம், இந்திய அமைதிப் படையின் இன அழிப்பு அட்டூழியங்கள் உள்ளிட்ட அனைத்தும் பிரதமர் (ராஜீவ்காந்தி) அலுவலகத்தில் முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டவை என ஹர்கிரத்சிங் எடுத்துக்கூறுகிறார். (மேற்படி நூல் பக்கம் 57 மற்றும் 124)போட்டிக் குழுக்களை வைத்து சீர்குலைக்க இந்திய அரசு செய்த முயற்சிகளை பிரபாகரன் தலைமை வெற்றிகரமாக எதிர்கொண்டதற்குப் பிறகு விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலைத்தலைவரான மாத்தையாவை இந்திய அரசின் கையாளாக 'ரா’ மற்றும் இராணுவ உளவுப்பிரிவு ஆகியவை மாற்றின. இதன் காரணமாக தளபதி கிட்டுவைத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இழந்தது. பல்வேறு குழப்பங்கள் தலைதூக்கின. மிகப்பொிய இச்சிக்கலையும் பிரபாகரன் வெற்றிகரமாக எதிர்கொண்டார்.அண்மையில் இலங்கையின் உளவுப்பிரிவும் இந்திய இராணுவத்தின் உளவுப்பிரிவும் இணைந்து துரோகி கருணாவை உருவாக்கின. இதனையும் பிரபாகரன் தலைமை வெற்றிகரமாக எதிர்கொண்டது. ஆயினும் பல்வேறு இழப்புகளை இயக்கம் சந்திக்க நேர்ந்தது.இப்போது இந்திய அரசின் முழுத்துணையோடு சிங்கள அரசு தமிழ் இன அழிப்புப் போரை முழுவீச்சில் நடத்திவருகிறது. இன்றைய நிலையில் விடுதலைப்புலிகளின் ஆட்சிப்பகுதி சுருங்கி முல்லைத்தீவுக்குள் இருந்து கொண்டு போரை நடத்தும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சூழலை பயன்படுத்தி பிரபாகரன் இல்லாத அல்லது அவரைப் பத்தோடு பதினொன்றாக சேர்த்துக் கொள்கிற-தமிழீழம் அல்லாத “தீர்வுத் திட்டம்’’ ஒன்றை ஈழத்தமிழர்கள் மீது திணிக்க இந்திய அரசு முனைந்துள்ளது. பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் அறிக்கைகள் சொல்கிற செய்தி இதுதான். இதைத்தான் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் விரும்புகிறார். “நம் நெஞ்சத்து அனலை தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீசச் செய்திருக்கிறது’’ என்று பிரணாப் முகர்ஜி அறிவிப்பை உச்சி மோந்து பாராட்டுகிறார் கருணாநிதி.சோனியா அரசின் 'திணிப்புத் தீர்வை’ ஆதரிப்பதில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் வேறுபாடில்லை. 'பிரபாகரன் சர்வாதிகாரி சகோதர இயக்கங்களை அழித்தவர் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்’ என்று கருணாநிதி திரும்பத்திரும்பக் குற்றம் சாற்றுகிறார். “பிரபாகரன் பயங்கரவாதி சிக்கலே அவர்தான். அவரை வைத்துக்கொண்டுத் தீர்வு காண முடியாது’ என்று நஞ்சு கக்குகிறார் ஜெயலலிதா. மயிலை மாங்கொல்லைப் பொதுக்கூட்டத்தில் ப. சிதம்பரமும் இதையேதான் இதம்பதமாகக் கூறினார்.“வியப்பு’ என்னவென்றால் ஈழத் தமிழர்கள் மீதான போருக்கு எதிராக முழங்கும் மக்கள் கலை இலக்கியக் கழகமும் இதையேதான் கூறுகிறது.“ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம். ஆனால் புலிகள் நடத்துகிற விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கமாட்டோம். ஏனென்றால் பிரபாகரன் ஃபாசிஸ்ட்’’ என்று ம.க.இ.க. கூறுகிறது. ஜெயலலிதா கூட “இலங்கை’’ தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாக கூறுகிறார்.ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம், ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி எனக் கோரமாட்டோம் என்றால் என்ன பொருள்? கோட்பாட்டை ஆதரிப்போம்; ஆனால் அதன் செயல்பாட்டை ஆதரிக்கமாட்டோம் என்று கூறும் தன் முரண்பாடு இது. இந்தத் தன்முரண்பாட்டில் ஒரு நயவஞ்சகம் ஒளிந்துள்ளது.மாசேதுங்கை ஒதுக்கிவிட்டு சீன விடுதலையை நினைத்துப் பார்ப்பது எவ்வாறு முடியாத செயலோ, காஸ்ட்ரோவை ஒதுக்கிவிட்டு கியூப விடுதலையைப் பேசுவது எவ்வளவு பெரியதவறோ அதே போலத்தான் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஈழச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதாகச் சொல்வதும் வஞ்சகமானது.பல வெற்றி-தோல்விகள், சரிதவறுகளைக் கடந்து பல நிறை- குறைகளை செரித்து தமிழீழத்தின் வரலாற்று வழியில் படி மலர்ச்சி பெற்றதுதான் பிரபாகரன் தலைமை ஆகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உள்ள தலைமைதான் பிரபாகரன் தலைமை என்றாலும், உலக விடுதலை இயக்கங்கள், புரட்சி அமைப்புகள் எல்லாம் பாடம் படிக்கவேண்டிய பல சிறப்புகளைப் பெற்ற தலைமை ஆகும் இது. பிரபாகரனை ஒதுக்கிவிட்டு ஈழச்சிக்கலைத் தீர்க்கப்போவதாகக் கூறுவது தமிழீழ வரலாற்றையேப் புறக்கணிப்பதாகும்.இதைத்தான் சோனியா தலைமை விரும்புகிறது. விடுதலைப் புலிகளை விட்டுவிட்டு சிங்கள அரசின் பாதுகாப்பு வளையத்திற்கு வருமாறு இந்திய அரசு அழைப்பதன் பின்னணி இதுதான். ஊர் துறந்து, வீடிழந்து உள்ள உள்நாட்டு அகதிகளின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகையாக ஈழத்தமிழர்களை மாற்றுகிற சதித்திட்டமே இது. தாயகம் என்று உரிமை கொண்டாட ஏதுமற்றவர்களாக ஈழத்தமிழர்களை இது மாற்றிவிடும். சொந்தப் பாதுகாப்பு அற்ற, சிங்கள வெறி அரசின் அடிமைக் கூட்டமாக ஈழத் தமிழர்களைத் தாழ்த்தி விடும் இன அழிப்புத் திட்டமே இது.ஏப்ரல்-மே நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இந்த இன அழிப்புத் தீர்வை செயல்படுத்தி விடவேண்டும் என்பதில் சோனியாகாந்தியின் இந்திய ஆட்சி தீவிரம் காட்டுகிறது. வடக்குகிழக்கு மாகாண சீரமைப்பு என்ற பெயரால் பல்லாயிரம்கோடி ரூபாயை இலங்கை அரசுக்கு கொட்டிக் கொடுப்பதிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்கி சிங்களக் குடியேற்றத்தை விரிவாக்குவதிலும் முனைப்பு காட்டிவருகிறது.ஆயினும் இவர்கள் திட்டமிடுகிற வகையில் களத்தில் விடுதலைப்புலிகளை ஒழிக்க முடியாமல் இந்திய - சிங்களக் கூட்டணி திணறுகிறது. அதேநேரம் தமிழ்நாட்டு மக்களுக்கிடையே இந்தப் போரை நடத்துவது சோனியாவின் பழிவாங்கும் வெறி என்ற தெளிவு விரிவடைந்து வருகிறது. காஸ்ட்ரோ இல்லாத கியூபா, அராஃபத்தை நீக்கிய பாலஸ்தீனம், மாசேதுங் இல்லாத சீனா என்ற ஆதிக்கவாதிகளின் திட்டங்கள் தவிடுபொடியானதை வரலாறு கண்டு இருக்கிறது.பிரபாகரன் இல்லாத - தமிழ் ஈழம் அல்லாத திணிப்பு தீர்வும் இதே கதியைத்தான் அடையப்போகிறது. அதற்குத் தமிழ்நாட்டில் ஆற்றவேண்டிய பணியைத் தமிழர்கள் நிறைவேற்றவேண்டும். வரலாறு விடுத்திருக்கிற அழைப்பு இது.இந்திய அரசே,தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீகீகீக்கு;கு!சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆயுத உதவி, படைப்பயிற்சி, பண உதவி செய்ய்யாதே!என்று போராடுவோம்.

NELLAI.D.S.SRITHAR

NELLAI.D.S.SRITHAR

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்க்கீடிட்டை மறுக்கிற மோசடி மசோதா

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்க்கீடிட்டை மறுக்கிற மோசடி மசோதா
மன்மோகன்சிங் அரசு மேலும் ஒரு மோசடி மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியினருக்கு இந்திய அரசின் குடிமைப்பணிகள் உள்ளிட்ட உயர் அலுவல் வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க உறுதியான சட்ட ஏற்பாடு செய்வதாக சொல்லிக்கொண்டு உயர் பணி வாய்ப்புகளிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை விலக்கி வைக்கும் சூதான சட்ட முன்வடிவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. ‘பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கு பதவிகள் மற்றும் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு, 2008 என்ற பெயரில் கடந்த 2008 டிசம்பர் 19-ஆம் நாள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 2009 பிப்ரவரி 19-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டதுஇம்மசோதா. உயர் பணிகளில் இடஒதுக்கீட்டுக்கு உட்பட்ட பணி எண்ணிக்கையை அவ்வப்போது அரசு அறிவிப்புகளின் வழி செய்ததற்கு மாறாக, உறுதியான சட்ட ஏற்பாடு செய்வதாக இம்மசோதாவின் “நோக்கங்களில்” கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இச்சட்ட முன்வடிவு விதி-4 உயர் பதவி வாய்ப்புகளை பெருமளவில் தாழ்த்தப்பட்டபழங் குடியினருக்கு கிடைக்காமல் தட்டிப்பறிக்கும் ஏற்பாடாக உள்ளது. விதி-4 (1) இடஒதுக்கீட்டி லிருந்து விலக்கப்பட்ட பணி மற்றும் பதவி வாய்ப்புகளை வரையறுக்கிறது. 45 நாட்களுக்குக் கீழ் உள்ள தற்காலிக பதவி மற்றும் பணி வாய்ப்புகள், இடர்நீக்க பணிகளுக்காக அவசரத் தேவைகளுக்கு உருவாக்கிக் கொள்ளப்படும் பதவி வாய்ப்புகள் இடஒதுக்கீடடிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன.மேலும் இந்திய அரசு மற்றும் அரசு சார் பணிகளில் யு-குரூப் பதவிகளில் கீழ்மட்ட பதவிகள் தவிர உள்ள உயர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது. இதுதவிர “அறிவியல் அல்லது தொழில் நுட்பப் பதவி’ என்று இச்சட்ட முன்வடிவின் விதி 2(த) வரையறுக்கிற பணிகளுக்கும் இடஒதுக்கீடு கிடையாதாம். “அறிவியல் அல்லது தொழில் நுட்பப் பதவி” என்பது தெளிவாக வரையறுக்கப்படாமல் பலவற்றையும் இவ்வரையறையில் சேர்த்துக்கொள்வதற்கு ஏற்றாற்போல் தொளதொளப்பான “உள்ளிட்ட” என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. “இயற்கை அறிவியல் அல்லது துல்லிய அறிவியல் அல்லது செயல்பாட்டு அறிவியல் அல்லது தொழில்நுட்பம் போன்ற கல்வி அறிவு தேவைப்படக்கூடிய பணிகள் உள்ளிட்டவை” என பிரிவு 2(j) விளக்கம் அளிக்கிறது. இதன்மூலம் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த இந்திய அரசு நிறுவனங்களின் பெரும்பாலான பணி மற்றும் பதவி வாய்ப்புகள் தாழ்த்தப்பட்ட - பழங்குடியினருக்கு மறுக்கப்படுகின்றன.இதுபோதாதென்று விதி-4(1) (iஎ) தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கப்படவேண்டிய “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள்” பட்டியல் ஒன்றை அறிவிக்கிறது. இதில் சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் உள்ள ஐ.ஐ.டி.கள், திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உள்ளிட்ட 14 என்.ஐ.டி.கள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆகிய 47 நிறுவனங்கள் உள்ளன.கல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம், விக்டோரியா நினைவகம், தில்லியில் உள்ள போர்நினைவு அருங்காட்சியகம் போன்றவை கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்ற பெயரால் இடஒதுக்கீட்டிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு விலக்கி வைக்கப்பட்டுள்ளன. புதுதில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குனர் பார்ப்பன வெறியர் வேணுகோபால் விருப்பத்தை இந்த மசோதா விரிவாக நிறைவேற்றி வைத்திருக்கிறது. இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., போன்ற கல்வித்தகுதியில் உள்ள பணி வாய்ப்புகள் கூட தாழ்த்தப்பட்ட பழங்குடியின இளைஞர்களுக்கு இந்த மசோதா மூலம் மறுக்கப்படுகிறது.இந்திய அரசின் அருங்காட்சியக நூலகங்களில் கூட மேலாளர் அல்லது நூலகர் நிலையிலான பணிகளிலும் இம்மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்று பொருள். இதுமட்டுமின்றி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பதவிகள் என்ற வரையறுப்பில் இந்திய அரசின் பாலிடெக்னிக்குகளில் கூட ஆசிரியர் பணியிடங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன. புதுவை போன்ற ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளில் (யு+னியன் பிரதேசங்களில்) உள்ள பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றின் ஆசிரியர்ப் பணிகளும் இடஒதுக்கீட்டி லிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன.இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கப்படும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை அவ்வப்போது நீட்டவும், மாற்றவும் இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் விதி. 4(1) கூறுகிறது. இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள குறைவான இடஒதுக்கீடு வாய்ப்பு களையும் உறுதியாக செயல் படுத்துவதற்கான ஏற்பாடு இல்லை. ஏனெனில் இச்சட்ட முன்வடிவின் விதி 18 ஆனது, “வேண்டுமென்றே” இடஒதுக்கீட்டை செயல்படுத்தாத அதிகாரிகளின் மீது மட்டும்தான் துறைசார் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட முடியும் என்று கூறுகிறது. சாதிவெறியோடு வேணு கோபால் போன்ற ஓர் அதிகாரி இடஒதுக்கீட்டை செயல்படுத்த மறுத்தாலும், அவர் வேண்டுமென்றே அவ்வாறு செய்தார் என்று மெய்பிக்கும் வரையில் அவர் மீது ஒரு துரும்பும் படாது. அதுகூட துறைசார் ஒழுங்கு நடவடிக்கைகள் என்று கூறப்படுகிறது.அதாவது பணி இடமாற்றம் உள்ளிட்ட மென்மையான நடவடிக்கைகள் கூட ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரால் குறிக்கப்படும். சாதிவெறியர்கள் தப்பித்துக்கொள்ளலாம். மொத்தத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு உயர் நிறுவன பதவிகளில் இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வதாக அறிவித்துக்கொண்டே இடஒதுக்கீட்டை பறிக்கிற மோசடி மசோதாவாகும் இது.இவ்வளவு கொடுமையான சட்ட முன்வடிவு நாடாளுமன்ற மாநிலங்க ளவையில் எந்த விவாதமும் இல்லாமல் கண் சிமிட்டும் நேரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் நமது சனநாயக அவலம். இம்மசோதா தாக்கல் செய்யப்படும்போது பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபித்து குரல் எழுப்பினாலும், அது சில வினாடிகள் கூட நீடிக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் செல்வி மாயாவதி இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று பிரதமருக்கு ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியதோடு தமது எதிர்ப்பை முடித்துக்கொண்டார். பிற கட்சியினர் இதுகூட செய்யவில்லை.ஆயினும் இச்சட்ட முன்வடிவு நாடாளுமன்ற மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டால்தான் சட்டமாக மாறும் என்ற ஒரு இறுதி வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு பிறகு நிறுவப்படுகிற மக்களவையின் கூட்டத்தில் இம்மசோதா முன்வைக்கப்படலாம். அப்போதாவது சமூக அநீதியான இம்மசோதாவை நிறைவேற்றவிடாமல் அனைத்து கட்சியினரும் விழிப்புடன் தடுக்கவேண்டும்.அதைவிட உருவாகிற புதிய அரசு இம்மசோதாவை சட்டமாக்காமலேயே விட்டுவிடுவதே நல்லது. சனநாயக நெறியிலும், சமூக நீதியிலும் அக்கறை உள்ள அனைத்து அமைப்பினரும், ஏடுகளும், ஓசையில்லாமல் நடந்துள்ள இந்த மோசடியை வெளிப்படுத்தி விழிப்புணர்வை உருவாக்கவேண்டும். மசோதா என்ற நிலையிலேயே இது புதைக்கப்படவேண்டும்.