Sunday, May 1, 2011

ஐ.நா வில் இலங்கை

சுதந்திரம் பெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர்,1955 டிசம்பால் இலங்கை ஐ.நா வில் சேர விழைந்தது, அதில் அனுமதியூம் பெற்றது. அது முதல், அது சர்வதேச சமூகத்தின் செயலூக்கமுள்ள உறுப்பு நாடாக விளங்கி வருகிறது. இந்த உறவினால்தான் உலக அமைப்பில் தனது அங்கத்துவம் மூலம் நாடு பயனடைந்துள்ளது. இந்த உலக அமைப்பில் சர்வதேச ஒத்துழைப்பின் நெறிமுறைகளுக்கும் தரங்களுக்கும் இலங்கை பங்களிப்பைச் செய்திருக்கின்றது.





இந்தக் காலங்களில் பின்வரும் ஐ.நா. உறுப்புக்களில் இலங்கை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றது:







UN Global







Reform at United Nations







UN News







UN Secretary General







பொதுச் சபை



இலங்கை எல்லா பொதுச் சபைக் கூட்டங்களிலும் சமூகமளித்தது. 1976 பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தியது: 1978 படைக்குறைப்புக் கூட்டத் தொடருக்கான யோசனையை முன்வைத்தது. பொதுச் சபையே விவாதத்துக்கான ஐ.நா வின் பிரதான அரங்கு. எல்லா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கும் ஒரேயொரு ஐ.நா. உறுப்பு இது மாத்திரமே. ஓவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. சர்வதேசப் பாதுகாப்பு முதல் ஐ.நா வரவு-செலவுத் திட்டம் வரையில் ஐ.நா சாசனத்தில் உள்ள எந்த விடயம் பற்றியும் உறுப்பினர்கள் கலந்துரையாட முடியும். பொதுச் சபை அதன் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் பாரிந்துரைகளைச் செய்ய முடியும். ஆனால், இவற்றின் மீது செயல்படுவதற்கு நாடுகளை நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அதற்கு இல்லை. பொதுச் சபை, வருடத்தின் செப்டெம்பர் நடுப்பகுதியில் இருந்து மூன்று மாதங்களுக்குக் கூடும்இ விசேட அவசரக் கூட்டத் தொடர்களையும் நடத்தும். அதன் வருடாந்தக் கூட்டத்தொடர் “பொது விவாதத்துடன்” ஆரம்பமாகின்றது. ,தில் ஒவ்வொரு அங்கத்துவ நாடும் உலக நிகழ்வுகளின் வாய்ப்பு பற்றிய அறிக்கையை விடுக்கும்.





பாதுகாப்புச் சபை



இலங்கை 1960க்கும் 1965க்கும் இடையே நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்தது. உலகளாவிய சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் கடமை பாதுகாப்புச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளைக் கொண்டது. அவை சீனா, பிரான்ஸ், ரஸ்யா, பிர்ட்டன், ஐக்கிய அமரிக்கா ஆகும். ஏனைய பத்து நாடுகள் சுழற்சி அடிப்படையில் தற்காலிக அங்கத்துவத்தைப் பெறுகின்றன. பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும், மோதல்களில் படைபலப் பிரயோகத்தை அங்கீகாரிக்க முடியும். அது அமைதி காக்கும் நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்கின்றது.





செயலகம்



ஜயந்த தனபால செயலாளர்-நாயகம் பதவிக்காக இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு அபேட்சகராக இருந்தா.



அநேக இலங்கையர்கள் செயலகத்திற்காகப் பணியாற்றியூள்ளன. செயலகம், ஐ.நா வின் தினசார பணிகளை மேற்கொள்கின்றது, ஸ்தாபனத்தின் வேலைத் திட்டங்களையூம் கொள்கைகளையூம் நிர்வகிக்கின்றது, 170 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7,500 செயலக உத்தியோகத்தர்கள் செயலகத்துக்காகப் பணியாற்றுகின்றன.





பொருளாதார-சமூக மன்றம



இந்த மன்றம் ஐ.நா வின் பொருளாதார, சமூக, மனிதநேய, கலாச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது. அது மனித உரிமைகள், சமூக அபிவிருத்தி, தொழிநுட்பம், மருந்துப்பொருட்கள் மற்றும் பிற பிரச்சினைகளைக் கையாளும் ஆணைக்குழுக்களது பணிகளை மேற்பாHவை செய்கின்றது. அதன் உறுப்பினர்கள் 54 பேரும் பொதுச் சபையினால் தொவூ செய்யப்படுகின்றனர்.





சர்வதேச நீதிமன்றம



இந்த நீதிமன்றம் ஐ.நாவின் பிரதான சட்ட உறுப்பு: நாடுகள் அதனிடம் சமர்ப்பிக்கும் சட்டப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் கடமையைப் பெற்றிருக்கி;னறது. நெதHலாந்திலுள்ள த ஹேகில் அது செயல்படுகின்றது. நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளும் பொதுச் சபையினாலும் பாதுகாப்புச் சபையினாலும் தொவூ செய்யப்படுகின்றனர்.





அமைதி காத்தல



இலங்கை ஐ.நாவூக்குத் துருப்புக்களைப் பங்களிப்பு செய்யூம் 16வது மிகப் பொய நாடு. ஹயிற்றி, கோட் டி ஐவோயர், சூடான், மேற்கு சகாரா, மொசாம்பிக், திமோர் லெஸ்தே, லைபீரியா ஆகியவற்றில் 1000 இலங்கை ஐ.நா துருப்புக்கள் பணியாற்றி இருக்கின்றன.



ஐக்கிய நாடுகள் அமைதி காத்தல் செயற்பாடு மோதலினால் பிளவூண்டுள்ள நாடுகளுக்கு உதவூம் தனித்துவமான, இயக்காற்றல்மிக்க கருவியாகும். நீடித்த சமாதானத்துக்கான நிலைமைகளை அது உருவாக்குகின்றது. பாதுகாப்புச் சபை ஐ.நா அமைதி காத்தல் நடவடிக்கைகளை உருவாக்குகின்றது. அவற்றின் வாய்ப்பு, ஆணை ஆகியவற்றை வரையறுக்கின்றது, 1948ம் ஆண்டு முதலாவது அமைதி காக்கும் பணி நிறுவப்பட்டது. அது முதல் உலகம் முழுவதிலும் மொத்தம் 63 அமைதி காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





ஓப்பந்தங்கள் (உடன்படிக்கைகள்)



இலங்கை முக்கியமான ஐ.நா உடன்படிக்கைகள் பெரும்பாலானவற்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது (இலங்கை அங்கீகாpத்துள்ள உடன்படிக்கைகள் இங்கு தரப்பட்டுள்ளன).

இனப் பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (1982 மார்ச் 20 முதல் நடைமுறையில் உள்ளது)

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் (1980 செப்டெம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ளது)

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (1998 ஜனவரி 03 முதல் நடைமுறையில் உள்ளது)

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு (1980 செப்டெம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ளது)

பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (1981 நவம்பர் 4 முதல் நடைமுறையில் உள்ளது).

பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (2003 ஜனவரி 15 முதல் நடைமுறையில் உள்ளது).

சித்திரவதை, மற்றும் பிற குரூர, மனிதாபிமானமற்ற வகையில் அல்லது தரக் குறைவாக நடத்துதல் அல்லது தண்டித்தலுக்கு எதிரான உடன்படிக்கை (1994 பெப்ருவரி 02 முதல் நடைமுறையில் உள்ளது).

சிறார் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (1991 ஆகஸ்ட் 11 முதல் நடைமுறையில் உள்ளது).

ஆயூத மோதல்களில் குழந்தைகளை ஈடுபடச் செய்வது சம்பந்தமான சிறார் உரிமைகள் பற்றிய உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (2002 பெப்ருவாரி 12 முதல் நடைமுறையில உள்ளது)

குழந்தைகளின் உரிமைகள் பற்றியூம் குழந்தைகளை விற்பனை செய்தல், குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவூ, சிறார் ஆபாசப்படவியல் பற்றியூமான உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (22 அக்டோபர் 2006).

வெளிநாடுகளில் தொழிலாளர்களாக இருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (2003 ஜூலை 1 முதல் நடைமுறையில் உள்ளது).

ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (30 மார்ச் 2007ல் கைச்சாத்திடப்பட்டது.







தீர்மானம்



இந்து மாகடலைச் சமாதான மண்டலமாக்குவது பற்றி 1971ம் ஆண்டு இலங்கை முன்வைத்த யோசனை அங்கீகாரி க்கப்பட்டது. அதுபோலவேஇ வீடற்றவர் களுக்கான சர் வதேசக் குடியிருப்பு ஆண்டாக 1987ம் ஆண்டின் பிரகடனம், விசாகத்தை ஐ.நா விடுமுறை தினமாக 1999ம் ஆண்டு அங்கீகாரிக்கப்பட்டமை ஆகியனவூம் இலங்கை முன்வைத்த யோசகைகளாகும்.



ஐ.நா உறுப்பு அமைப்பு ஒன்றினால் ஏற்கப்பட்ட முறையான வாசகமே ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாகும். எந்தவொரு ஐ.நா. உறுப்பு அமைப்பும் தீர்மானங்களை விடுக்க முடியூம் என்றாலும் நடைமுறையில் பெரும்பாலான தீர்மானங்கள் பாதுகாப்புச் சபை அல்லது பொதுச் சபையினால் விடுக்கப்படுகின்றன. பொதுச் சபையின் தீர்மானம் ஒன்றுக்குப் பொதுச் சபையில் ஐக்கிய நாடுகள் சபையின் எல்லா அங்கத்துவ நாடுகளும் வாக்களிக்கின்றன. இதனை நிறைவேற்றுவதற்குச் சாதாரணப் பெரும்பான்மை போதுமானது (ஆனால், விதிவிலக்காக முக்கியமான பிரச்சினைகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம்).





செயலாளர் நாயகம்



ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்குச் செயலாளர் நாயகம் தலைமை தாங்குகிறார். இது ஐக்கிய நாடுகள் சபையின் தலையாய உறுப்புக்களில் ஒன்றாகும். செயலாளர் நாயகம் உண்மையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராகவூம் அதன் தலைவராகவூம் விளங்குகின்றார். தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூன். இவர் தென் கொர்ரியாவின் முன்னாள் வெளியூறவூ அமைச்சர். அவர் 2007 ஜனவாரி முதலாம் திகதி பதவியேற்றார். அவரது முதலாவது பதவிக் காலம் 2011 டிசம்பர் 31ம் திகதி முடிவடைகிறது, அவர் மீண்டும் அப் பதவிக்கு நியமிக்கப்படும் தகுதி உள்ளவர். “இயக்காற்றலும் துணிவூம்” நிரம்பியதாக இருக்கக்கூடிய ஐ.நாவில. நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட விழையூம் ஒரு “பாலம் அமைப்பவராக” தாம் இருக்கப் போவதாய் அவர் கூறுகிறார். மத்தியக் கிழக்கு, சூடான், வட கொரியா ஆகியனவே தமது முன்னுரிமைகளாக அவர் இனங் கண்டுள்ளார்.





முகவர் நிறுவனங்களும் வேலைத்திட்டங்களும



அநேகமான இலங்கை ஊழியர்கள் முகவர் நிறுவனங்களிலும் ஆட்சி மன்றங்களிலும் பணிபுரிகின்றனர்.





ஏனைய உறுப்புக்கள்



இலங்கை பொருளாதார, சமூக மன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளது. சுகாதாரப் பராமாரிப்பு, போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக விளங்குகின்றார்.





ஐ.நாவில் புகழ்பூத்த இலங்கையர்கள்



காமினி கொரியா அங்டாட்டின் செயலாளர் நாயகமாக இருந்தார்.

ஜயந்த தனபால யூனிடிர்மற்றும் படைக்குறைப்பு விவகாரங்களில் ஆகவூம் மூத்தப் பதவிகளை வகித்தார்.

சி.வீரமந்திரி சர்வதேச நீதிமன்றத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

ராதிகா குமாரஸ்வாமி குழற்தைகள் மற்றும் மோதலுக்கான துணைச் செயலாளராக இருக்கின்றார்.

பாலித கொஹொன ஐ.நாவின் உடன்படிக்கைப் பிரிவூக்குத் தலைவர்.








No comments:

Post a Comment