Friday, January 21, 2011

நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதா ? வரவேற்கத்தக்கதா ?......

வணக்கம் தோழர், மும்பையில் சன் டிவியின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன் , தலைப்பு : நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதா ? வரவேற்கத்தக்கதா ?......
முக்கியமாக, இந்த தேர்வு கண்துடைப்பு என்பது தெரியும் ..... அதில் பதிவு பண்ணவே சென்றேன் ....
நான் எடுத்து கொண்ட தலைப்பு நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதே !!
முதல் சுற்றில் அம்பேத்கர் பனியன் அணித்து நான் பேசியது ..

நாகரிக சமூகம் என்றும், அறிவியல் முன்னேற்றம் என்றும், வல்லரசு என்று மார்தட்டினாலும், இந்தியச் சமூகம் இன்றும் இந்துத்துவ அடிப்படையில் மனிதர்களை நடத்துகின்றது என்பதையும், அரசுகளும் அதன்படிதான் செயல்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்தவைகள்தான். இப்படியான ஒன்றுதான் மனித மலத்தை மனிதர்களையே கையால் அள்ளளும் கொடுமை. இந்த இழிதொழில்களிலும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையே ஈடுபடுத்தும் வன்கொடுமையும் நிகழ்கின்றது...
நாகரிக சமூகம் என்றும், அறிவியல் முன்னேற்றம் என்றும், வல்லரசு என்று மார்தட்டினாலும், இந்தியச் சமூகம் இன்றும் இந்துத்துவ அடிப்படையில் மனிதர்களை நடத்துகின்றது என்பதையும், அரசுகளும் அதன்படிதான் செயல்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்தவைகள்தான். இப்படியான ஒன்றுதான் மனித மலத்தை மனிதர்களையே கையால் அள்ளளும் கொடுமை. இந்த இழிதொழில்களிலும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையே ஈடுபடுத்தும் வன்கொடுமையும் நிகழ்கின்றது.
நூற்றாண்டுகள் கடந்தாலும் கழியாத கலையாத சாதிவெறி.. ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசினேன். இரண்டாம் சுற்றுக்கும் தேர்வானேன் ..... மேலே குறிப்பிட வற்றை பேச கூடாது என நிபந்தனையுடன்.....மேலும் அம்பேத்கர் பனியன் அணித்து வரகூடாது என நிபந்தனையுடன் .....இரண்டாம் சுற்றில் பேசிய நாகரிக வளர்ச்சி வரவேற்கத்தக்கதே அணி சார்ந்தவர்கள் ..... நகரத்தின்
மெட்ரோ வளர்ச்சி , கட்டிடம் வளர்ச்சி என பேசி கொண்டே போனார்கள் ...
இதே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ....நகரத்தின்
மெட்ரோ வளர்ச்சி , கட்டிடம் வளர்ச்சி என் சொல்லி கொண்டு வீட்டு வசதி திட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். ஆனால் நகர்ப்புற ஏழை மக்களுக்கும், குடிசையில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தில் அனுமதிக்கப்படாது..... என பேசிய கொண்டே போனேன் ......நான் முன்றாம் சுற்றிலிருந்து நிக்கபட்டேன் .....

உங்கள் பார்வையில் நாகரிக வளர்ச்சி வருந்தத்தக்கதா ? வரவேற்கத்தக்கதா ?......

No comments:

Post a Comment